தமிழகத்தில் வரும் மே 1 முதல் ஒற்றைச்சாளர முறை அமல் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் தானியங்கி ஒற்றைச்சாளர கட்டட அனுமதி முறை மே 1 முதல் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தானியங்கி ஒற்றைச்சாளர கட்டிட அனுமதி முறை மே 1 முதல் அமலுக்கு வருகிறது என்றும் இது மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் முதல் கட்டமாக செயல் முறைக்கு வருகிறது எனவும் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கட்டட அனுமதி
கட்டட பிரிவில் சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடம் தவிர, 10 சதவிகித இடத்தை பொழுதுபோக்கிற்கு, 1 சதவிகித இடத்தை பொது பயன்பாட்டிற்கு மற்றும் 0.5 சதவிகித இடத்தை மின்சார வாரியத்திற்கு வழங்க வேண்டும். 2019 முதல் நடைமுறையில் உள்ள இந்த விதிகளில் மனை பிரிவுக்கு அனுமதி பெறும் நடைமுறை எளிமைப்படுத்துமாறு கிரெடாய் அமைப்பினர் கோரிக்கை வைத்திருந்தனர். அதில், கட்டடம் கட்ட அனுமதி கேட்கும் மனைப்பிரிவை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்த பின்னர் கட்டிடம் கட்ட அனுமதி தரப்படும்.
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் ஒரு வாரம் மூடல் – தனியார் பள்ளிகள் சங்கம் முடிவு!
கட்டிட கட்ட சாலை, திறந்தவெளி அதற்கு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு ஒதுக்கப்படும் இடத்தை உறுதி செய்து அதற்கான ஆவணங்களை உள்ளாட்சி அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். குடி தண்ணீர், சாலை, மழைநீர் வடிகால் மற்றும் விளக்குகளுக்கான கட்டணத்தை மனை பிரிவினர் உள்ளாட்சி அமைப்புகளிடம் கட்ட வேண்டும். அதன்பிறகு, இந்த அடிப்படை வசதிகள் அனைத்தும் இருப்பது உறுதியானால் மட்டும் கட்டிடம் கட்ட அனுமதி வழங்கப்படும். அப்படி இல்லை என்றால் மனை பிரிவினர் கட்டடம் கட்ட அனுமதி கிடையாது என்று தமிழக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க முழு விபரங்கள் இதோ!
இதனை தொடர்ந்து மக்கள் கட்டட அனுமதி வாங்க சிரமப் படுகிறார்கள் என்ற காரணத்தால் தமிழக அரசு மக்களின் வசதிக்கு ஏற்ப தானியங்கி முறையில் பதிவு செய்து வாங்குவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கொண்டு,கட்டிடம் கட்ட அனுமதி வேண்டி பொதுமக்கள் இனி நேரில் வர தேவையில்லை என்றும் உரிய ஆவணங்களை இணையதளத்தில் சமர்ப்பித்தால் தானியங்கி முறையில் அனுமதி பெறலாம். அனைத்து அனுமதிகளையும் ஒரே நேரத்தில் ஒற்றைச்சாளர முறையில் வழங்க அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். இந்த திட்டம் மே 1 ம் தேதியில் அமலுக்கு வருகிறது குறிப்பிடத்தக்கது.