தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள் ஒரு வாரம் மூடல் – தனியார் பள்ளிகள் சங்கம் முடிவு!
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் குறைந்த அளவு கட்டணம் வசூலிப்பதற்கு அனுமதிப்பதை எதிர்த்து தனியார் பள்ளி நிர்வாகங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ஜூன் மாதத்தில் ஒரு வாரத்திற்கு அனைத்து பள்ளிகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மூடல்
கடந்த 2 ஆண்டுகளாக நிலவி வரும் கொரோனா பேரலை தொற்று தாக்கத்திற்கு மத்தியில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு துறைகள் பெருமளவு பாதிப்புகளை சந்தித்து வருகிறது. அந்த வகையில் கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான தனியார் பள்ளிகள் முடங்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. இப்படி இருக்க நோய்த்தொற்று காலங்களில் பள்ளிகள் சரிவர செயல்படாததால் தனியார் பள்ளி நிர்வாகங்கள் போதுமான வருமானம் இன்றி நஷ்டத்தை சந்தித்து வந்தது.
TN Job “FB Group” Join Now
இதற்கிடையில் கொரோனா பரவல் காலங்களில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு குறைந்த அளவு கட்டணங்களை வசூலிக்க தனியார் பள்ளி நிர்வாகங்களுக்கு வலியுறுத்தப்பட்டது. இந்த கட்டணங்களை தமிழக அரசின் கட்டண நிர்ணய குழு நிர்ணயிக்கிறது. அந்த வகையில் அதிகப்படியான பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யூகேஜி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1000 முதல் ரூ.2 ஆயிரம் வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தவிர, 12ம் வகுப்புகளுக்கு ரூ.10 ஆயிரம் வரை கல்வி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது மிகவும் குறைந்த அளவு கட்டணமாக இருப்பதால் தனியார் பள்ளிகளை நடத்துவதில் நிர்வாகங்கள் சிரமத்தை சந்தித்து வருகிறது. இந்த சூழலில் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணங்களை நிர்ணயிக்க கோரி தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிகள் சங்கத்தின் சார்பாக ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் பலரும் சென்னை டிபிஐ வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் மே 5ம் தேதியன்று கடைகள் அடைப்பு – வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு!
இது குறித்து தனியார் பள்ளி ஆசிரியர் சங்கத்தின் நிர்வாகி நந்தகுமார் கூறுகையில், ‘தமிழகத்தில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சுமார் 40 ஆயிரம் வரை செலவழிக்கும் நிலையில் தனியார் பள்ளி மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தை நிர்ணயம் செய்வது ஏற்க முடியாது. இதனால் அரசின் கட்டண நிர்ணயக்குழுவை கண்டித்து போராட்டம் தொடரும். மேலும், ஜூன் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதும் ஒரு வாரத்திற்கு பள்ளிகளை மூடி போராட்டம் செய்யவும் முடிவு செய்துள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.