தமிழகம் முழுவதும் மே 5ம் தேதியன்று கடைகள் அடைப்பு – வணிகர் சங்க பேரமைப்பு அறிவிப்பு!
வரும் மே மாதம் 5ம் தேதியன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் திருச்சியில் வைத்து மாநாடு நடத்தப்பட இருப்பதால் அன்று ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் உள்ள கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடைகள் அடைப்பு
தமிழகத்தில் வரும் மே மாதம் 5ம் தேதியன்று வணிகர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் வைத்து தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ‘வணிகர் விடியல்’ என்ற பெயரில் மாநாடு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளும் செயல்படாது என வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தகவல் அளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘தமிழகத்தில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 39வது வணிகர் தினம் கொண்டாடப்பட இருக்கிறது.
TN Job “FB Group” Join Now
அந்த வகையில் மே மாதம் 5ம் தேதியன்று திருச்சியில் வைத்து வணிகர் விடியல் மாநாடு நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விழாவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளார். இந்த தினத்தன்று கன்னியாகுமரி முதல் கும்மிடிப்பூண்டி வரை உள்ள அனைத்து கடைகள், பெருநிறுவனங்கள், தொழிற்கூடங்கள், உணவகங்கள், மருந்தகங்கள், மால்கள், நகைக்கடைகள், ஜவுளி கடைகள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்படும்.
பாக்கியா மீது தவறு இல்லை என நிரூபித்த எழில், விடுதலையான பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
இப்போது வணிகர் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தும் விதமாகவும், வணிக ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாகவும் அனைத்து வணிகர்களும் திருச்சியில் நடைபெறும் மாநாட்டில் பங்கு பெற வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக தமிழகத்தில் கடை அடைப்பு குறித்த முடிவு, வணிகர் பேரமைப்பின் மாநில பொருளாளர் ஹாஜி ஏ. எம். சதக்கத்துல்லா, தமிழ்நாடு உணவுப்பொருட்களின் வியாபார சங்கத்தலைவர் எஸ்.பி. ஜெய்பிரகாசம், மாநில நிர்வாகிகள் கோவிந்தராஜூலு மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.