பாக்கியா மீது தவறு இல்லை என நிரூபித்த எழில், விடுதலையான பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
பாக்கியா மீது தவறு இல்லை என நிரூபித்த எழில், விடுதலையான பாக்கியா - இன்றைய
பாக்கியா மீது தவறு இல்லை என நிரூபித்த எழில், விடுதலையான பாக்கியா - இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
பாக்கியா மீது தவறு இல்லை என நிரூபித்த எழில், விடுதலையான பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் எழிலிற்கு ஜானு போன் செய்து அம்மா சமைத்த உணவை பரிசோதனை செய்ய உதவி செய்வதாக சொல்கிறார். பின் எழில் அதை கொண்டு சென்று கொடுக்கிறார். மறுபக்கம் ராதிகா பெயர் நியூஸ் பேப்பரில் வந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைகிறார்.

பாக்கியலட்சுமி

இன்று பாக்கியலட்சுமி சீரியலில், சதீஸ் எழிலிற்கு போன் செய்து எதாவது ஐடியா கிடைத்ததா என கேட்கிறார். அப்போது எழில் அம்மா சமைத்த பரிசோதனை செய்து பார்த்தால் எதாவது ஐடியா கிடைக்கும் எழில் சொல்கிறார். பின் சதீஸ் ஜாணுவிற்கு போன் செய்து சொல்ல ஜானு எழிலிற்கு உதவி செய்கிறேன் என சொல்கிறார். பின் ஜானு விவரங்களை அனுப்ப எழில் பாக்கியா சமைத்த உணவை கொண்டு சென்று பரிசோதனை செய்ய கொடுக்கிறார். மறுநாள் தான் ரிசல்ட் கிடைக்கும் என்பதால் எழில் வருத்தமாக இருக்கிறார். மறுபக்கம் கோபி ராதிகா வீட்டில் இருக்க மயூரா வெளியே நிற்கும் போது பேப்பரை தூக்கி எரிந்துவிட்டு செல்கின்றனர்

TN Job “FB  Group” Join Now

அப்போது ராதிகா பேப்பரை பார்க்க அதில் ராதிகாவின் பெயர் இருக்கிறது. அதை படித்து காட்டி கோபியிடம் சொல்லி ராதிகா வருத்தப்படுகிறார். பின் எழில் ரிசல்ட் வாங்க வர அதில் லட்டு தான் சரியில்லை என வருகிறது. எழில் வீட்டிற்கு வர செல்வி பாக்கியா எங்கே என கேட்கிறார். அம்மாவை கோர்ட்டில் தான் பார்க்க வேண்டும் என சொன்னதாக சொல்கிறார். பின் எழில் நீங்க செய்து கொடுத்த லட்டில் தான் பிரச்சனை இருப்பதாக சொல்ல ஆனால் செல்வி லட்டு செய்யவில்லை என சொல்கிறார். பின் எழில் அம்மாவை காப்பாற்ற கிளம்பி செல்கிறார்.

மறுபக்கம் ஈஸ்வரி பேப்பரில் வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். பின் கோபியும் காணவில்லை என சொல்ல ராமமூர்த்தி பாக்கியாவை நினைத்து வருத்தப்படுகிறார். பின் எழில் அந்த ஆசிரமத்திற்கு செல்ல உங்க அம்மா சமைத்த சாப்பாட்டை சாப்பிட்டு தான் பிரச்சனையா என கேட்கிறார். எழில் என் அம்மா லட்டு கொடுக்கவில்லை என சொல்ல அப்போது தான் ஆசிரம உரிமையாளருக்கு உண்மை தெரிய வருகிறது. பின் எழில் போலீஸ் ஸ்டேஷன் போக ஆனால் போலீஸ் எழிலை வெளியே போக சொல்கிறார். பாக்கியாவிற்கு என்ன செய்வது என தெரியாமல் இருக்க, வெளியே வந்து செழியன் நல்ல வேளை உண்மையை கண்டுபிடித்தாய் என சொல்கிறார்.

ஜெகாவிடம் பணம் கேட்ட மூர்த்தி, கடன் வாங்கியது தெரிந்து வருத்தப்படும் கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

பின் கோர்ட்டில் எழில் செழியன் காத்துக் கொண்டிருக்க வக்கீலிடம் என்ன ஆச்சு என கேட்கிறார். இன்னும் அரை மணி நேரத்தில் தீர்ப்பு என சொல்ல எழில் செழியன் அம்மாவை நினைத்து வருத்தத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். பின் நீதிமன்றம் பாக்கியாவை விடுதலை செய்கிறது. பாக்கியா வெளியே வர செழியன் எழிலை அழைக்கிறார். இருவரும் பாசத்துடன் ஓடி வந்து காட்டி அணைத்து கொள்கின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!