இலவசங்கள் தருவது குறித்து ஐகோர்ட் அதிரடி – முக்கிய தகவல் வெளியீடு!
தேர்தல் காலங்களில் இலவச அறிவிப்புகளை அரசியல் கட்சிகள் வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா பொதுநலன் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு குறித்து முக்கிய கருத்தை உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
சுப்ரீம் கோர்ட் அதிரடி
நாட்டில் இலவச பொருட்களை கொடுக்காதீர்கள் என உத்தரவிட முடியாது என்று சுப்ரீம் கோர்ட் தற்போது கருத்து தெரிவித்துள்ளது. அதாவது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய சாா்பில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தோ்தலின்போது இலவச அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசுகள் நிதி நிலையை ஆராயாமல், இலவசங்களை விநியோகிக்கும் முறையை ஆய்வு செய்ய நிபுணர் குழுவை ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே மாநில அரசுகளின் கடன் நிலுவையில் உள்ள போதிலும், இலவசங்களை விநியோகிக்க அவை கூடுதலாக கடன் பெறுகின்றன.
Exams Daily Mobile App Download
ஆகையால், கடன் மதிப்பீட்டு முறையை ஏற்படுத்துவது அவசியம் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை இன்று காலை உச்ச நீதிமன்றத்தில் வந்த போது, இலவசங்களும் சமூக நலத்திட்டங்களும் வெவ்வேறானவை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தெரிவித்தார். அப்போது, இலவச வாக்குறுதிகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வெளியிட வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை மறுத்த உச்ச நீதிமன்றம், “இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்களைக் கொடுக்காதீர்கள்” என்று உத்தரவிட முடியாது.
டில்லியில் நாளுக்கு நாள் இரட்டிப்பாகும் கொரோனா – பொதுமக்கள் பீதி!
மேலும் இதைக் கொடுங்கள் இதைக் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட்டால் இந்தியா போன்ற நாட்டில் அதை செயல்படுத்த முடியாது. இலவசங்களை அறிவிக்கும் கட்சிகளின் பதிவை ரத்து செய்வது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல். எனவே, ஜனநாயகத்திற்கு விரோதமான செயல் என்பதால் அதனை உச்ச நீதிமன்றம் செய்யாது. மேலும் பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில், மக்கள் நலத்திட்டங்களை மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும். மக்கள் நலத்திட்டங்களுக்கும், இலவசங்களுக்கும் வேறுபாடு உள்ளது. மேலும் இவ்வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஆகஸ்ட் 17-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.