மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வுடன் HRA அதிகரிப்பு? கணக்கீடு விவரங்கள் இதோ!
சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) தொகை 3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இதனுடன் சேர்த்து வீட்டு வாடகை கொடுப்பனவும் (HRA) உயர்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
HRA அதிகரிப்பு
கடந்த மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகை 34% ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் DA உயர்த்தப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, மையம் இப்போது வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது. இப்போது 3% DA உயர்த்தப்பட்டதன் மூலம், மத்திய அரசு ஊழியர்களின் மொத்த DA 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த உயர்த்தப்பட்ட அகவிலைப்படி ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வரும். இது தொடர்பான அறிக்கைகளின்படி, மத்திய அரசு ஊழியர்கள் HRA உயர்வை எதிர்பார்க்கலாம் என தெரிகிறது.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்றவர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
இந்த HRA தொகை கடந்த DA உயர்வின் போது, கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு ஜூலை 2021ல் உயர்த்தப்பட்டது. இப்போது மீண்டும் HRA உயர்த்தப்பட்டால், அரசு ஊழியர்களின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இருக்கும். தற்போது, மத்திய அரசு ஊழியர்கள் தங்கள் வசிப்பிடங்களின் வகைகளுக்கு ஏற்ப 9 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 27 சதவீதம் என்ற விகிதத்தில் HRA பெறுகின்றனர். இப்போது அடுத்த தவணைக்கான HRA 3 சதவீதம் வரை அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் X வகை நகரங்களில் உள்ள பணியாளர்கள் தங்கள் ஹெச்ஆர்ஏவை 3 சதவீதமும், Y பிரிவு நகரங்களில் 2 சதவீதமும், Z பிரிவு நகரங்களில் உள்ள ஊழியர்களின் எச்ஆர்ஏ 1 சதவீதமும் அதிகரிக்கலாம்.
அந்த வகையில் உயர்த்தப்படும் HRA விகிதங்கள் நகரங்களின் வகைகளைப் பொறுத்து 10 சதவீதம், 20 சதவீதம் மற்றும் 30 சதவீதமாக இருக்கும். அதாவது, மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச HRA 10 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர மத்திய அரசு ஊழியர்களுக்கான பொருத்துதல் காரணிகளின் அடிப்படையில், ஃபிட்மென்ட் காரணியை உயர்த்துவது குறித்து அரசாங்கம் ஒரு பெரிய முடிவை எடுக்கலாம் என்று சொல்லப்படுகிறது. முன்னதாக, ஃபிட்மென்ட் பேக்டரை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்பது மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகவும் இருந்து வருகிறது.