தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் பெற்றவர்களின் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரை நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது சேலம் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிக்குமார் தகுதி வாய்ந்த பயனாளிகளின் பெயர்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
நகைக்கடன் தள்ளுபடி
தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் விவசாய கடன் மற்றும் நகைக் கடன் இரண்டையும் தள்ளுபடி செய்வதாக திமுக தலைவர் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தார். அதன்படி திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சொன்னபடி பல திட்டங்களையும் நேர்த்தியாக செயல்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அதேபோல 5 சவரனுக்கு குறைவாக அடகு வைத்திருக்கும் அனைத்து ஏழை எளிய மக்களின் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல நிபந்தனைகள் கூறப்பட்டிருந்த நிலையின் அடிப்படையில் மட்டுமே நகைகள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நகைக் கடன் தள்ளுபடியில் பல மோசடிகள் நடந்துள்ளது. அதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் தகுதி வாய்ந்த நகைக் கடன் உள்ளவர்கள் மட்டும் தேர்வு செய்து நகைகளை வழங்கினார். மேற்கொண்டு சேலம் மாவட்டத்தில் பொது நகைக் கடன் தள்ளுபடி திட்டம் 2021-ன் கீழ் தகுதி வாய்ந்த 1,45,364 பயனாளிகளின் பட்டியல் சேலம் மாவட்ட இணையதளத்திலும் மற்றும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அந்தந்த கூட்டுறவு சங்கங்களில் தகுதியானோர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கண்ட பட்டியலில் இடம்பெறாதவர் தகுதி இருப்பின் சம்பந்தப்பட்ட சேலம், ஆத்தூர், ஓமலூர், சங்ககிரி சரக துணை பதிவாளர் அலுவலகங்களில் 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம். 30 நாட்களுக்குப் பிறகு வரப்பெறும் மேல்முறையீட்டு மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது. இதுவரை 7232 மேல்முறையீட்டு மனுக்கள் வரை பெற்றுள்ளது என்றும் இம்மனுக்கள் மீது தகுதியின் அடிப்படையில் தீர்வு செய்யப்படும் என கூறப்பட்டிருக்கிறது.