மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் & HRA அதிகரிப்பு? முழு விவரம் இதோ!

0
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் & HRA அதிகரிப்பு? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் & HRA அதிகரிப்பு? முழு விவரம் இதோ!
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் & HRA அதிகரிப்பு? முழு விவரம் இதோ!

மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த மாதங்களில் அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிக்கப்பட்டதை அடுத்து வீட்டு வாடகை கொடுப்பனவும் (HRA) சராசரியாக உயரும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

HRA உயர்வு

சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி (DA) மற்றும் DR தொகை 31% மாக உயர்த்தி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அகவிலைப்படி (DA) உயர்வுக்குப் பிறகு, மத்திய அரசு ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) உயர்த்துவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ஜனவரி 2022 முதல் பெரிய அளவில் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!

இதற்கு மத்தியில் 11.56 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களின் வீட்டு வாடகைப்படியை (HRA) அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நிதி அமைச்சகம் பரிசீலிக்க தொடங்கியுள்ளது. அதாவது இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம் (IRTSA) மற்றும் இந்திய ரயில்வே நேஷனல் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் ஃபெடரேஷன் (NFIR) ஆகியவை 2022 ஜனவரி 1 முதல் வீட்டு வாடகை கொடுப்பனவை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு முன்னதாக கோரிக்கைகளை விடுத்தன.

இவற்றை கருத்தில் கொண்டு அரசு ஊழியர்களின் HRA தொகைக்கான முன்மொழிவு ரயில்வே வாரியத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இப்போது இதற்கான ஒப்புதல் கிடைத்ததும், வரும் ஜனவரி 2022 முதல் மத்திய அரசு ஊழியர்கள் திருத்தப்பட்ட HRA தொகையை பெறுவார்கள். இந்த அலவன்ஸ் தொகை அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்திலும் சேர்க்கப்படும். பொதுவாக அரசு ஊழியர்களுக்கான HRA தொகை X, Y மற்றும் Z என நகரங்கள் மற்றும் நகரங்களின் வகைப்பாட்டின் படி கணக்கிடப்படுகிறது.

கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – பக்ரைன் அரசு அனுமதி!

அந்த வகையில் X பிரிவின் கீழ் வரும் பணியாளர்களுக்கு இப்போது மாதம் ரூ 5400 க்கு மேல் வீட்டு வாடகை கொடுப்பனவு கிடைக்கும். இதைத் தொடர்ந்து Y பிரிவு நகரங்களில் வசிப்பவர்களுக்கு மாதம் ரூ.3600, Z பிரிவு நகரங்களில் வசிப்பவர்களுக்கு மாதம் ரூ.1800 வழங்கப்படும். இதில் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் X பிரிவை உள்ளடக்கியது. இந்த நகரங்களில் வசிக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, HRA தொகை 27% ஆக உயர்த்தப்படும். அறிக்கைகளின்படி, ‘Y’ மற்றும் ‘Z’ வகைகளில் வசிப்பவர்களுக்கு, HRA முறையே 18% மற்றும் 9% ஆக உயர்த்தப்படும் என தெரிகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!