Post Office சேமிப்பு திட்டம் – தினமும் ரூ.50 சேமித்தால் ரூ.35 லட்சம் ரிட்டர்ன்!
போஸ்ட் ஆபீஸில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் இயங்கி வருகிறது. அதில் முக்கியமான ஒன்றாக கிராம சுரக்ஷா யோஜனாவும் உள்ளது. இந்த திட்டம் குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கிராம சுரக்ஷா யோஜனா:
தற்போதைய கால கட்டத்தில் சேமிப்பு என்பது இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. வங்கிகளில் சேமிப்பு கணக்கு தொடங்குவது போன்றே அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு திட்டங்கள் பல இயங்கி வருகிறது. சிறு சேமிப்பு திட்டம் முதல் முதிர்வு தொகையில் லாபத்தை வாரி வழங்கும் திட்டங்கள் பல அமலில் உள்ளது. இதில் வழங்கப்படும் திட்டங்களில் நல்ல லாபம் மற்றும் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. மக்களிடையே குறைந்து வரும் சேமிப்பு பழக்கத்தை மீட்டெடுக்க இது போன்ற திட்டங்கள் உதவுகின்றன.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் & HRA அதிகரிப்பு? முழு விவரம் இதோ!
மற்ற திட்டங்களை போலவே போஸ்ட் ஆபீஸில் அமலில் இருக்கும் ஒரு திட்டம் கிராம சுரக்ஷா யோஜனா. இந்த திட்டத்தின் கீழ் 19 வயது முதல் 55 வயது வரை உள்ள இந்திய குடிமக்கள் கணக்கை தொடங்க முடியும். இத்திட்டத்தில் பயனர்கள் குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். கணக்காளர் பிரீமியத்தை மாதாந்திர முறையில் செலுத்த வேண்டும். இந்த திட்டத்தின் கீழ் சேமிக்கும் வாடிக்கையாளர்கள் தினமும் ரூ.50 சேமித்தால் 35 லட்ச ரூபாய் பெற முடியும்.
தமிழக அரசு சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!
வாடிக்கையாளர்கள் 10 லட்சத்திற்கு கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். தினமும் ரூ. 50 என மாதத்திற்கு ரூ. 1,515 பிரீமியம் தொகையை 55 ஆண்டுகளுக்கு கட்ட வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு பாலிசி முடிவில் வட்டியுடன் சேர்த்து ரூ.34.60 லட்சம் வழங்கப்படும். பயனர்கள் தேவைப்பட்டால் இடையிலும் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். முடிவில் சேமிப்புக்கான மொத்த தொகை மற்றும் போனஸ் உங்களின் அதிகாரப்பூர்வ வாரிசு அல்லது நீங்கள் நாமினி செய்த நபர்களுக்கு சென்று விடும்.