தமிழக அரசு சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு!
தமிழகத்தில் தருமபுரி மாவட்டத்தில் படிக்காதவர்கள் மற்றும் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை பயின்ற அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கும் விதமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெற உள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. கொரோனா காலகட்டத்தில் பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களது வேலையை இழந்து தவித்து வருகின்றனர். இந்த விஞ்ஞான உலகத்தில் படித்து பட்டம் பெற்றவர்களுக்கே வேலை கிடைப்பது என்பது மிகக்கடினமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் தற்போது பல்வேறு தனியார் நிறுவனங்கள் தங்களது நிறுவனங்களுக்கு பணிபுரிய தகுதியான ஊழியர்களை தேடிக்கொண்டிருக்கிறது.
கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – பக்ரைன் அரசு அனுமதி!
அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது தருமபுரி மாவட்டத்தில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நாளை நடைபெறவுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாம் தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் நாளை (நவ.13) சனிக்கிழமை காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலர் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
மழையால் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.25,000 நிவாரணத்தொகை – முதல்வர் அறிவிப்பு!
இந்த வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. அதனால் இம்முகாமில் படிக்காத மற்றும் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ. , பாலிடெக்னிக் , பி.இ. படித்த (இருபாலரும்) வேலை தேடும் இளைஞர்கள் அனைவரும் உரிய சான்றிதழ் நகலுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவிக்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.