1 முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விடுமுறை நாட்கள் ஒத்திவைப்பு!

0
1 முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - விடுமுறை நாட்கள் ஒத்திவைப்பு!
1 முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு - விடுமுறை நாட்கள் ஒத்திவைப்பு!
1 முதல் 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – விடுமுறை நாட்கள் ஒத்திவைப்பு!

கொரோனா காலகட்டத்தில் மாணவர்களின் நேரடி கல்வி திறன் அதிகம் பாதிக்கப்பட்டது. அதை ஈடு செய்ய அனைத்து கல்வி நிறுவனங்களும் முயன்று வருகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர மாநில வாரியத்தின் கீழ் உள்ள பள்ளிகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் முடிந்து, அதன் பிறகு விடுமுறைகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

கோடை விடுமுறை ஒத்திவைப்பு:

கொரோனா பாதிப்பால் உலகமே அதிக பேரழிவை சந்தித்து. மேலும் மாணவர்களின் நேரடி கல்விமுறையும் அதிகம் பாதித்தது. வகுப்புகள், தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் வாயிலாக நடந்தது. தற்போது படிப்படியாக தாக்கம் குறைந்து பொதுமக்கள் அனைவரும் மீண்டு இயல்பு நிலைக்கு திரும்புகின்றனர். மேலும் அமலில் இருந்த கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. எனவே மாணவர்களுக்கு ஏற்பட்ட கல்வி இழப்பை ஈடுசெய்ய 1 முதல் 9ம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ‘முழு நாள்’ செயல்படும் என்று மகாராஷ்டிரா கல்வித்துறை தெரிவித்துள்ளது. 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான ஆண்டுத் தேர்வுகள் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குள் முடிந்து, அதன் பிறகு மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இன்று அமலாகும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் – போராட்டம் எதிரொலி!

இது குறித்து மகாராஷ்டிரா அரசின் இணைச் செயலர் ஐ.எம்.காசி செய்தி குறிப்பு வெளியிட்டு உள்ளார். அந்த செய்தி குறிப்பில் பள்ளிகள் அரை நாள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தன்னார்வத்துடன் செயல்படுவதற்கு பதிலாக சனிக்கிழமைகளில் முழு நாள் செயல்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் நடத்தப்பட்டு மே மாதத்திற்குள் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் புனே மாவட்ட முதல்வர்கள் சங்கத்தின் தலைவர் ஹரிஷ்சந்திர கெய்க்வாட் பிப்ரவரி இறுதிக்குள் அரசாங்கம் இந்த ஜிஆர் வெளியிட்டிருக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த வகையில் பள்ளிகள் ஏற்கனவே தேர்வுகளை நடத்துவதற்கான ஆயத்தங்களை முடித்துவிட்டு கால அட்டவணையை வெளியிட்டு விட்டதாக கூறினார். இந்த ஜி.ஆர் கல்வித்துறை மே மாதத்திற்குள் முடிவுகளை அறிவிக்க பள்ளிகளை கேட்டுள்ளது, ஆனால் தேதி வழங்கப்படவில்லை மற்றும் காலக்கெடு இருந்திருந்தால், பள்ளிகளுக்கு திட்டமிடுவது எளிதாக இருந்திருக்கும் என கெய்க்வாட் கூறினார். சாதாரண பாடத்திட்டத்தில், மகாராஷ்டிர மாநில வாரியத்தின் கீழ் உள்ள பள்ளிகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் முடிந்து, அதன்பின் விடுமுறைகள் தொடங்கும். இப்போது இந்த புதிய ஜிஆர் மூலம், மாணவர்கள் ஏப்ரல் இறுதி வரை பள்ளிகளுக்கு வர வேண்டும், என்று அவர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!