இன்று அமலாகும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் – போராட்டம் எதிரொலி!
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் காரணமாக ஏற்பட்ட எரிபொருள் மற்றும் உரங்களின் விலை உயர்வுக்கு எதிராக தென் அமெரிக்கா பகுதியான பெரு நாட்டில் ஏராளமான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விலை உயர்வு
உலகளவில் கொரோனா தொற்று ஏற்படுத்திய மாற்றத்தை அடுத்து, தற்போது உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை காரணமாக பல்வேறு நாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் எரிபொருள் ஆகியவற்றின் விலை அதீத உயர்வு கண்டுள்ளது. அந்த வகையில் எரிபொருள் மற்றும் உரங்களின் விலை உயர்வுக்கு எதிராக தென் அமெரிக்காவின் பெரு நகரில் ஏராளமான மக்கள் வீதிகளில் இறங்கி தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தை தடுக்கும் விதமாக பெரு தலைநகர் லிமா மற்றும் அண்டை துறைமுக நகரத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – அமைச்சர் அதிரடி அறிவிப்பு!
இது குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ள ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ, ‘அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காக ஏப்ரல் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணி முதல் இரவு 11:59 மணி வரை குடிமக்களின் நடமாட்டத்திற்கு தடை விதிக்க அமைச்சரவை ஒப்புக்கொண்டது’ என்று குறிப்பிட்டுள்ளார். இப்போது உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பால் நிகழ்ந்த எரிபொருள் மற்றும் உரங்களின் விலை உயர்வுக்கு எதிராக நேற்று (ஏப்ரல்.4) முதல் ஏராளமான போராட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் வரை சிறப்பு தற்செயல் விடுப்பு – அரசாணை வெளியீடு!
இந்த போராட்டத்திற்கு மத்தியில், விண்ணை உயர்த்தும் விலையை குறைக்க அனைத்து முயற்சிகளையும் அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் நாட்டில் பணவீக்கத்திற்கு எதிரான வன்முறைப் போராட்டங்களை கட்டுப்படுத்த ஆயுதப் படைகளையும் அரசாங்கம் நிறுத்தி உள்ளது. இந்த போராட்டங்கள் வன்முறையாக மாறியுள்ளதாகவும், இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பெருவியன் அரசு தெரிவித்துள்ளது. மேலும், கடந்த வாரத்தில் விவசாயிகள், லிமாவிற்கு செல்லும் சில முக்கிய நெடுஞ்சாலைகளை தடுக்க அந்நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளும் எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.