தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை? கல்வித்துறை பரிசீலினை!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து தற்போது அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்படத் தொடங்கியுள்ளன. இந்த நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க பரிசீலனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
கோடை விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நேரடி வகுப்புகள் வழக்கம் போல நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அத்துடன் இந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதனால் பொதுத்தேர்வுக்கான பாடங்களை விரைந்து முடிக்குமாறு அனைத்து பள்ளி ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
TNPSC Group தேர்வுக்கு படித்து வருபவரா? – இதோ உங்கள் கவனத்திற்கு..!
அதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாட்களில் பள்ளி வேலை நாட்களாக கருதி முழுவீச்சில் தொடர்ந்து பாடங்களை நடத்தி வருகின்றனர். பொதுவாக வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு மாணவர்களின் நலன் கருதி கோடை விடுமுறையாக மே மாதம் முழுவதும் விடுமுறை அளிக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு குறைவான நாட்களே நேரடி வகுப்புகள் நடைபெற்றது. அதனால் ஏப்ரல் மாத இறுதியில் தேர்வு தொடங்கி மே மாதம் நடைபெற உள்ளது. அத்துடன் இந்த ஆண்டு கோடை விடுமுறையும் குறைவான நாட்களே அளிக்கப்படுள்ளது.
தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – ஆசிரியர்களுக்கு புதிய கல்வி விதிகள்!
இந்த நிலையில் தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் வெயிலின் தாக்கத்தால் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். அத்துடன் 1 முதல் 5ம் வகுப்பு படிக்கும் தொடக்கப்பள்ளி மாணவர்கள் மிகவும் சீரமத்திற்கு உள்ளாகின்றனர். அதனால் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை பரிசீலினை மேற்கொண்டு வருகிறது. அதன்படி வருகிற 23 மற்றும் 30ம் தேதிகளில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.