தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – ஆசிரியர்களுக்கு புதிய கல்வி விதிகள்!
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை தண்டிக்க கூடாது என்ற தமிழக அரசின் சட்டம் உள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்கள் குறித்த சில தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம். மேலும் அரசின் சார்பில் பல விதிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்தும் கீழே பார்ப்போம்.
தமிழக பள்ளி மாணவர்கள்:
தமிழ்நாட்டில் தற்போது இரண்டு ஆண்டுகள் கழித்து கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கபட்டு மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் இந்த ஆண்டு கண்டிப்பான முறையில் பொது தேர்வுகள் நடக்கும் என்று கூறப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து பொதுத் தேர்வுகளுக்கான தேதிகளையும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் அறிவித்தது. மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஏப்ரல், மே மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
மாநில அரசு ஊழியர்களுக்கு 2 நாட்கள் விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
இந்த நிலையில் ஏற்கனவே பள்ளிகளில் மாணவர்களை தண்டிக்க கூடாது என்ற தமிழக அரசின் சட்டம் உள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்கள் என்ன என்பது குறித்த விரிவான தகவல்கள், மற்றும் அரசு விதிகள் சொல்வது என்ன என்பது குறித்து இதில் காணலாம். இந்நிலையில் தற்போது தமிழ்நாடு கல்வி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு மன ரீதியாகவோ உடல் ரீதியாகவோ மாணவர்களுக்கு தண்டனை வழங்குவதை தமிழ்நாடு கல்வி விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது .
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – ஆன்லைனில் அப்டேட் செய்வது எப்படி?
இந்நிலையில் தற்போது மாணவர்களுக்கு எவ்வாறு தண்டனை வழங்கலாம் என்றும் கூறப்பட்டு உள்ளது. அது என்னவென்றால், வீட்டுப் பாடங்களை ஐந்து முறைக்கு மிகாமல் எழுத வைத்தல், செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது மைதானங்களை தூய்மைப்படுத்த சொல்வது உள்ளிட்ட பணிகளை வழங்குதல், மாலை நேரங்களில் சற்று காலதாமதமாக மாணவனை வீட்டுக்கு அனுப்பி வைத்தல், தவறு செய்யும் மாணவர்களை பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்வது பிரச்சினைக்குரிய மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து பேசுவது போன்ற செயல்களை செய்யலாம் என்று அரசின் சார்பில் தெரிவித்து உள்ளது.