தமிழக மாணவர்களுக்கு பள்ளிகளில் விடுமுறை – அதீத வெப்ப நிலையின் எதிரொலி!
தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சுமார் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவி வருகிறது. அதனால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விடுமுறை:
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் படிப்படியாக பள்ளிகள் திறக்க தொடங்கியது. வழக்கம் போல நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்த மாநில பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. கடந்த வருடம் கொரோனா அச்சம் காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. நடப்பு கல்வியாண்டில் நேரடி வகுப்புகள் நடைபெறுவதால் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்த மாநில கல்வித்துறை திட்டமிட்டு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது.
TN Job “FB Group” Join Now
தற்போது செய்முறை தேர்வுகள் முடிவடைந்த நிலையில் 12ம் வகுப்புகளுக்கு மே 5ம் தேதியும் 10ம் வகுப்பிற்கு 6ம் தேதியும் தேர்வு தொடங்க உள்ளது. இந்நிலையில் கோடை விடுமுறை குறித்த அறிவிப்பையும் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு வருகிறது. அதன்படி மே மாதம் 10 அல்லது 13 நாட்கள் மட்டுமே பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது. இந்த நிலையில் அதிகரித்து வரும் கோடை வெப்பம் காரணமாக முன்கூட்டியே விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.
சென்னை: நகைப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!
தமிழகத்தில் சுமார் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நிலவி வருவதால் தினமும் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில், தமிழகத்தில் வரும் 13 ஆம் தேதி கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில் வெப்பத்தின் காரணமாக இந்த விடுமுறை முன்கூட்டியே விடப்பட உள்ளது. தமிழகத்தை தொடர்ந்து பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஏற்கனவே வெப்பத்தின் காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.