சென்னை: நகைப்பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அதிரடியாக குறைந்த ஆபரணத் தங்கத்தின் விலை!
தமிழகத்தில் ஆபரண தங்கத்தின் விலை அதிரடியாக ரூபாய் 360 குறைக்கபட்டு சவரனுக்கு ரூபாய் 38, 368 என்று விற்பனை ஆகி வருகிறது. மேலும் இன்று அட்சய திருதியை என்பதால் நகை பிரியர்கள் மிகவும் ஆர்வத்துடன் நகைகளை வாங்கி மகிழ்ந்து வருகின்றனர்.
ஆபரணத் தங்கத்தின் விலை :
உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் கடந்த இரு ஆண்டுகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவியது. அதனால் பல வார்த்தகங்களும் செயலில் இல்லாமல் போனது. அதில் மிகவும் முக்கிய ஒன்றாக ஆபரண தங்கமும் ஒன்றாக இருந்து வந்தது. பொதுவாக சாதாரண நாட்களில் திருமணம் போன்ற நிகழ்வுகளுக்காக நகை பிரியர்கள் அதிகமாக நகைகளை வாங்கி மகிழ்வார்கள். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் தங்கத்தின் விலையும் அதிகரித்தது. மேலும் நகை பிரியர்கள் தங்க நகைகளை வாங்க முடியாமல் சிரமப்பட்டு வந்தனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் உக்ரைன் நாடு போரில் சிக்கி தவித்து வருகிறது. அதனால் தற்போது வரை தங்கத்தின் விலை உயர்ந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் தற்போது தங்கத்தின் விலை கடந்த ஒரு ஒரு வார காலமாக ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இதனால் நகை பிரியர்கள் மிகவும் வருத்தத்தில் இருந்து வந்தனர். அதனை தொடர்ந்து நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து இருந்தது. இந்நிலையில், நகை பிரியர்களை மகிழ வைக்கும் வகையில் இன்றும் தங்கத்தின் விலை மிகவும் குறைந்து உள்ளது.
எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்வோருக்கான முக்கிய அறிவிப்பு – புதிய ஏற்பாடுகள் அறிமுகம்!
இந்த நிலையில் தமிழகத்தில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 4796 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 38,368 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி 67.20 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 67,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றைய தினம் அட்ச திருதியை தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்து உள்ள காரணத்தால் பொது மக்கள் மகிழ்ச்சியாக தங்கநகைகளை வாங்கி வருகின்றனர்.