நாளை முதல் மார்ச் 19ம் தேதி வரை வங்கிகளுக்கு விடுமுறை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இரு அமர்வுகளாக நடத்தப்படுகிறது. இதில் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தேதி அன்று நடைபெற்றது. இதையடுத்து 2வது அமர்வு நீண்ட காலத்திற்கு பிறகு மார்ச் 14ம் தேதி அன்று தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது.
விடுமுறை
நாடாளுமன்ற கூட்டத்தொடர் வருடத்திற்கு 3 முறை நடைபெறுகிறது. அதன்படி கடந்த ஜனவரி மாதத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடைபெற்றது. இதில் முதற்கட்டமாக பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி அன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்யப்பட்டது. இதனை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து பிப்ரவரி 11ம் தேதியுடன் முதல் அமர்வு முடிவுக்கு வந்தது. மேலும் 2வது அமர்வு பிப்ரவரி மாதத்திற்குள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அடுத்த 7 நாட்களுக்கு வங்கிகள் முழு அடைப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
இந்த நிலையில் 5 மாநிலத்திற்கும் சட்டமன்ற தேர்தல் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கியது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி வரை நடைபெற்றது. அதனால் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நடத்தப்படாமல் இருந்தது. அதன்படி தற்போது கடந்த 2 தினங்களுக்கு முன்பாக இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற தொடங்கியது. இந்த 2வது அமர்வு மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தலைமை தாங்கும் துணை குடியரசு தலைவர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் இனி ஞாயிற்றுக்கிழமை பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!
இவர் தெரிவித்ததாவது, வருகிற மார்ச் 17ம் தேதி அன்று ஹோலிப் பண்டிகையாகக் கொண்டாடப்பட உள்ளது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு இரு அவைகளுக்கும் 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது. அத்துடன் 19ஆம் தேதி சனிக்கிழமை மற்றும் 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் இரு அவைகளுக்கும் வருகிற மார்ச் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை என 4 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதனால் நாடாளுமன்ற கூட்டத்தொடர் மேலும் சில நாட்களுக்கு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த 4 நாட்கள் வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.