அடுத்த 7 நாட்களுக்கு வங்கிகள் முழு அடைப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
அடுத்த 7 நாட்களுக்கு வங்கிகள் முழு அடைப்பு - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
அடுத்த 7 நாட்களுக்கு வங்கிகள் முழு அடைப்பு - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
அடுத்த 7 நாட்களுக்கு வங்கிகள் முழு அடைப்பு – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

மார்ச் மாதத்தில் அடுத்து வரவிருக்கும் பதினைந்து நாட்களில் பொதுத்துறை வங்கிகள் சுமார் ஏழு நாட்களுக்கு அடைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி சேவைகளை விரைந்து நிறைவேற்றிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வங்கி விடுமுறை

பொதுவாக ஒவ்வொரு மாதத்திலும் வார இறுதி நாட்கள், மாதத்தில் 2 சனிக்கிழமைகள், அரசு விடுமுறைகள் என குறிப்பிட்ட சில நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறைகள் விடப்படுவது வழக்கம். இந்த விடுமுறைகள் ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 10 முதல் 15 நாட்களுக்கு இருக்கும். இப்படி இருக்க தற்போது நடைபெற்று வரும் மார்ச் மாதத்தில் இன்னும் பதினைந்து நாட்கள் மீதமிருக்கும் நிலையில் வங்கி விடுமுறை குறித்து வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இனி ஞாயிற்றுக்கிழமை பள்ளிகள் திறப்பு – பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!

அதாவது, மார்ச் 17 முதல் மார்ச் 29 வரை ஏழு நாட்களுக்கு அனைத்து பொதுத்துறை வங்கிகளும் செயல்படாது என்பதால், வாடிக்கையாளர்கள் சிக்கல்களை சந்திக்க நேரிடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இருப்பினும், மொபைல் மற்றும் இன்டர்நெட் வங்கி செயல்பாடுகள் தடையின்றி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வங்கி வேலை நாட்காட்டியின்படி, மார்ச் 17 முதல் மார்ச் 29 வரை ஐந்து நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை இருக்கும்

அதே நேரத்தில் வங்கி ஊழியர்கள் தொழிற்சங்கங்களின் அழைப்பின் பேரில் மேலும் இரண்டு நாட்களுக்கு வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். இதனால் மீதமிருக்கும் பதினைந்து நாட்களில் பொதுத்துறை வங்கிகள் சுமார் ஏழு நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். அதாவது, மார்ச் 17 மற்றும் மார்ச் 18 ஆகிய தேதிகளில் ஹோலி பண்டிகை கணக்கில் விடுமுறை இருக்கும் என்று வங்கி அதிகாரிகள் கூறுகின்றனர். தொடர்ந்து மார்ச் 19 ஆம் தேதி வங்கிகள் திறக்கப்படும். அடுத்ததாக மார்ச் 20 ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 26 நான்காவது சனிக்கிழமை மற்றும் மார்ச் 27 ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.

தமிழக மக்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி வங்கிகளில் தமிழ் மொழியில் சேவைகள்! மத்திய அரசு அறிவிப்பு!

இதற்கிடையில் மார்ச் 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அனைத்து அரசு வங்கி ஊழியர்களும் தங்களது தொழிற்சங்கங்களின் அழைப்பின் பேரில் அகில இந்திய அளவில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். வங்கித் துறையில் மத்திய அரசின் பல்வேறு கொள்கை மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த வேலைநிறுத்தம் நடத்தப்பட இருக்கிறது. இதனால் குறிப்பிட்ட இந்த 2 நாட்களிலும் வங்கிகள் முழுமையாக செயல்படாது என்பதால் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி சேவைகளை விரைந்து நிறைவேற்றிக்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!