11 மாவட்டங்களில் ஜூன் 13ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
தமிழகத்தில் வருகிற திங்கட்கிழமை ஜூன் 13ல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படவுள்ள நிலையில் பட்டதாரி மற்றும் ஆசிரியர் தொகுதிகளுக்கான சட்ட மேலவைக்கு தேர்தல் நடைபெற இருப்பதால் ஜூன் 13 அன்று விடுமுறை மமாநில அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகள் திறப்பு:
கோடை விடுமுறை காலமாக ஒரு மாதம் இடைவேளைக்கு பிறகு மீன்டும் வருகிற ஜூன் 13ல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் வடமேற்கு பட்டதாரிகள், தெற்கு பட்டதாரிகள், வடமேற்கு ஆசிரியர்கள் மற்றும் மேற்கு ஆசிரியர்கள் ஆகிய நான்கு தொகுதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதாவது ஆளும் பாஜகவும் எதிர்க்கட்சியான காங்கிரஸும் ஆசிரியர் மற்றும் பட்டதாரி தொகுதிகளில் இருந்து 3 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், நான்காவது இடத்தில் ஜனதா தளமும் போட்டியிடும்.
இவ்வாறு கர்நாடகாவில் உள்ள பட்டதாரி மற்றும் ஆசிரியர் தொகுதிகளுக்கான சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, மாநில அரசு பல மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை, அதாவது ஜூன் 13ஆம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது. விஜயபுரா, பாகல்கோட், பெலகாவி, மைசூரு, சாமராஜநகரா, மாண்டியா, ஹாசன், தார்வாட், ஹாவேரி, கடக் மற்றும் உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அரசு உதவிபெறும், உதவிபெறாத மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், மாநில மற்றும் மத்திய அரசு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள், கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அனைத்து நிறுவனங்களைச் சேர்ந்த பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.