தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ஆட்சியர் உத்தரவு!
ராமநாதபுரம் அருகே உள்ள ஏர்வாடியில் சந்தனக்கூடு திருவிழா வெகுவிமர்சியாக நடைபெறும். இந்த திருவிழாவில் முஸ்லிம் மதத்தினர் மட்டுமல்லாது அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டு வழிபாடு செய்வது வழக்கம் ஆகும். இந்த திருவிழாவை முன்னிட்டு 24.06.2022 ( நாளை) அன்று வெள்ளி கிழமை ஒருநாள் மட்டும் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ‘உள்ளூர் விடுமுறை” அறிவிக்கப்பட்டு உள்ளது.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
உலக புகழ் பெற்ற ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழா மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக ஏர்வாடி தர்ஹா பொது மகாசபை உறுப்பினர்கள் (ஹக்தார்) நடத்தி வருகின்றனர். இந்த விழாவிற்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழாவானது, ஜூன் 1-ந்தேதி மவுலீதுடன் தொடங்கியது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக இன்று மாலை சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு ஜூன் 24-ம் தேதி அதிகாலை( நாளை) தர்காவிற்கு சந்தனக்கூடு வந்தடையும்.
Exams Daily Mobile App Download
இந்த சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு வரும் ( நாளை) ஜூன் 24-ஆம் தேதி இராமநாதபுர மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கீழக்கரை வட்டம், ஏர்வாடி கிராமத்தில், ஏர்வாடி தர்ஹாவில் அமைந்துள்ள அல்குத்துபுல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராஹிம் ஷாஹித் ஒலியுல்லா தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு 24.06.2022 அன்று ( நாளை) ஒருநாள் மட்டும் இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ‘உள்ளூர் விடுமுறை” யாகவும், அதனை ஈடு செய்யும் பொருட்டு 02.07.2022 அன்று சனிக்கிழமை வேலைநாளாகவும் அறிவிக்கப்படுகிறது.
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 24) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த உள்ளூர் விடுமுறை நாள் செலவாணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், நாளை இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என்று இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.