தமிழக அனைத்து பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை? கல்வித்துறை விளக்கம்!
தமிழகத்தில் பள்ளி நாட்கள் தவிர சனி மற்றும் ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்க கூடாது. இந்த விதியை மீறி வகுப்புகளை நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
விடுமுறையில் வகுப்பு :
கொரோனா பாதிப்பு முற்றிலுமாக குறையாவிடிலும், முந்தய நிலையை காட்டிலும் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதால் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைத்து கல்வி நிறுவனங்களும் செயல்பட்டு வருகிறது. இவ்வாறு இரண்டு ஆண்டு கால இடைவேளைக்கு பிறகு பள்ளிகள் இயல்பு நிலையில் செயல்படுவதால் மாணவர்களும் பள்ளிக்கு செல்வதில் அதீத ஆர்வத்தை காட்டி செல்கின்றனர்.
EPS திட்ட பயனர்கள் கவனத்திற்கு – ஓய்வூதிய உச்ச வரம்பு நீக்கம்!
மேலும், நடப்பு கல்வியாண்டில் (2022- 2023 )அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என பள்ளிக் கல்வித் துறை ஏற்கனவே அறிவித்திருந்தும் சில பள்ளிகளில் விடுமுறை நாளான சனிக்கிழமை அன்றும் வகுப்புகள் எடுக்கப்படுவதாக தற்போது புகார் எழுந்துள்ளது. அதாவது நடப்பு கல்வியாண்டில் இருந்து கொரோனா கால அட்டவணை போல் இல்லாமல் வழக்கம் போல் பள்ளிகள் அனைத்தும் செயல்படத் தொடங்கியுள்ளதால் வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பள்ளிக்கூடங்கள் செயல்படும் எனவும் வார இறுதி நாளான சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் விடுமுறை கொடுக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
Exams Daily Mobile App Download
ஆனால் தற்போது திடீரென எழுந்துள்ள இந்த புகாரால் பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும் எச்சரிக்கையாக, கொரோனா காலகட்டத்தில் மாணவர்கள் பள்ளிக்கு வராததால் கல்வி கற்றல் இழப்பை சரிக்கட்டும் நோக்கத்தில் சனி கிழமைகளிலும் வகுப்புகள் எடுக்கப்பட வேண்டும் என அரசு அறிவித்தது. ஆனால் தற்போது அனைத்து பள்ளிகளும் முந்தய நிலை போலவே நேரடி வகுப்புகள் நடைபெறுவதால் பள்ளி நாட்களை தவிர்த்து விடுமுறை நாட்களில் வகுப்புகளுக்கு மாணவர்களை அழைக்க கூடாது. இந்த உத்தரவை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.