பள்ளி மாணவர்களுக்கு ஜூலை 20 முதல் விடுமுறை அறிவிப்பு – முக்கிய தகவல் வெளியீடு!
உத்தராகண்ட் மாநிலத்தில் கன்வார் யாத்திரை 15 நாட்கள் நடைபெற்று கொண்டிருப்பதால் இம்மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை முதல் வரும் ஜூலை 26 ஆம் தேதி வரைக்கும் விடுமுறை என அரசு அறிவித்துள்ளது.
பள்ளி விடுமுறை
உத்தராகண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில் கன்வார் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். அதாவது, இந்த யாத்திரையில் சிவ பக்தர்கள் உத்தராகண்ட் உத்தரகாண்டில் உள்ள ஹரித்வார், கௌமுக் மற்றும் கங்கோத்ரி மற்றும் பீகாரில் உள்ள சுல்தங்கஞ்ச் போன்ற புனித தலங்களுக்குச் சென்று கங்கை நதியின் நீரை எடுத்து வந்து சிவனுக்கு அபிஷேகம் செய்வார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுமே கொரோனா பரவலின் காரணமாக உத்தராகண்ட் மாநிலத்தில் கன்வார் யாத்திரை நடைபெறவில்லை.
தமிழகத்திலும் குரங்கு அம்மை வைரஸ் தொற்று? தடுப்பு பணிகள் தீவிரம்!
இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு தான் கன்வார் யாத்திரை ஜூலை 14 ஆம் தேதி முதல் துவங்கியுள்ளது. மேலும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த யாத்திரை நடைபெற இருப்பதால் கிட்டத்தட்ட 5 கோடிக்கும் மேலான சிவ பக்தர்கள் இந்த யாத்திரையில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், யாத்திரையில் பக்தர்கள் கூட்டம் மிக அதிக அளவில் இருந்தால் அவர்களின் நடமாட்டத்திற்கான சாலைகள் மூடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிக அளவில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், இந்த யாத்திரையின் போது நடைபெறும் அசம்பாவிதங்களை தடுக்க சாலைகளை மூடுவதோடு மட்டுமல்லாமல் பள்ளிகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அதாவது, ஹரித்துவாரில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சாரா, தனியார் பள்ளிகள், சமஸ்கிருத பள்ளிகள், மதரசாக்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களை ஜூலை 20 ஆம் தேதி முதல் ஜூலை 26 ஆம் தேதி வரை உள்ள 6 நாட்களுக்கு விடுமுறை என ஹரித்வார் மாவட்ட நீதிபதி விஜய் சங்கர் அறிவித்துள்ளார்.