அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஏப்ரல் 30 முதல் 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிப்பு – இதற்காக தான்!
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பொதுத் துறை மற்றும் அரசுத்துறை ஊழியர்களுக்கு ஏப்ரல் 30 முதல் 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காண்போம்.
பொது விடுமுறை
இஸ்லாமிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) ஒவ்வொரு ஆண்டும் ஈத் அல் பித்ர் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் ஈத் அல் பித்ர் பண்டிகையை கொண்டாடும் விதமாக அனைத்து பொதுத் துறை மற்றும் அரசுத்துறை ஊழியர்களுக்கு சுமார் 9 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பண்டிகை கால விடுமுறைகள் ஏப்ரல் 30 ஆம் தேதி தொடங்கும் என்றும் விடுமுறை முடிந்தவுடன் அதிகாரப்பூர்வ வேலை நேரம் மே 9 ஆம் தேதி மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ExamsDaily Mobile App Download
அந்த வகையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான அஜ்மானில் உள்ள மனிதவளத் துறை அரசு ஊழியர்களுக்கும் ஒன்பது நாட்களுக்கு ஈத் அல் பித்ர் விடுமுறைக்கு அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இந்த துறையில் உள்ள ஊழியர்களுக்கு ஈத் அல் பித்ர் பண்டிகை விடுமுறைகள் ஏப்ரல் 30 சனிக்கிழமை தொடங்கி மே 8 ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடையும் என்று அதிகாரப்பூர்வ உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அரசு நிறுவனங்கள், பணியின் தன்மை மற்றும் தேவைகளுக்கு ஏற்ப ஷிப்ட் முறையில் பணிபுரிந்து தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வீட்டுக் கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு – EMI குறைப்பது எப்படி?
இதற்கு முன்னதாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சரவை, நாடு முழுவதும் செயல்படும் அனைத்து மத்திய அரசு நிறுவனங்களுக்கும் ஒரு வார ஈத் அல் பித்ர் விடுமுறைக்கு ஒப்புதல் அளித்தது. இது ஏப்ரல் 30 தொடங்கி மே 6 வரை நீடிக்கும். அதே போல கூட்டாட்சி ஊழியர்கள் மே 9 முதல் மீண்டும் பணியை தொடங்குவார்கள் என்று தெரிவித்தது. இதற்கிடையில், ரமலான் ஏப்ரல் 29 முதல் ஷவ்வால் 3 வரையிலான காலப்பகுதியில் அனைத்து தனியார் துறை ஊழியர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை கடைபிடிக்கப்படும் என்று மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.