நடப்பு IPL தொடர் மிகவும் விறுவிறுப்பான நிலையில் உள்ளது. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் மிகக்கடுமையாக மல்லுக்கட்டுவதால் போட்டி மிக சுவாரசியமாக உள்ளது. தற்போது வரை முடிந்துள்ள போட்டிகளின் அடிப்படையில், ராஜஸ்தான் அணி 7 வெற்றியுடன் கம்பீரமாக உள்ளது. மீதமுள்ள போட்டிகளில் 2 அல்லது 3 வென்றால் போதும் பிளே ஆப்பிற்கு தகுதி பெற்று விடும்.
அதனைத் தொடர்ந்து கொல்கத்தா, ஐதராபாத் மற்றும் லக்னோ அணிகள் 10 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது. இதில் ஐதராபாத் அணி மற்ற அணிகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறது. அதன் அதிரடி ஆட்டத்தால் நிச்சயம் டாப் 2 இடங்களில் வந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கொல்கத்தா மற்றும் லக்னோ அணிகள் நலன் பார்மில் உள்ளன
TNPSC குரூப் 4 2024: பொதுத்தமிழ் ஈஸியா படிச்சு முடிக்கலாம்!!
நடப்பு சென்னை, டெல்லி மற்றும் முன்னாள் சாம்பியன் குஜராத் இம்மூன்றும் 4 வெற்றிகளுடன் உள்ளன.இதில் சென்னை அணி சற்று சறுக்கலை சந்தித்தாலும் மற்ற அணிகள் ஏறுமுகத்தில் உள்ளன. எஞ்சிய போட்டிகளில் வெற்றிகள் பெற்றாலே போதும் என்பதால் இவற்றிற்கும் பிளே ஆப் வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.
மீதமுள்ள மும்பை பஞ்சாபி மற்றும் பெங்களூர் அணிகள் எஞ்சிய எல்லா போட்டிகளிலும் நல்ல ரன் ரேட் உடன் வெற்றி பெற வேண்டியது அவசியம். அனல் டாப் ஆர்டர் அணிகள் அசுர பலத்துடன் இருப்பதால் இவற்றிற்கான வாய்ப்பு மங்கலாகவே உள்ளது.