பேரிடர் காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் – மத்திய அரசு எச்சரிக்கை!!

0
பேரிடர் காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் - மத்திய அரசு எச்சரிக்கை!!
பேரிடர் காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் - மத்திய அரசு எச்சரிக்கை!!
பேரிடர் காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் பதுக்கல் – மத்திய அரசு எச்சரிக்கை!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் அத்தியாவசிய பொருள்கள் பதுக்குவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது.

அத்தியாவசிய பொருள்கள் குறித்த அறிவிப்பு:

நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளன. தமிழகத்தில் இன்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் படி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை அத்தியாவசிய பொருள்கள் தவிர அனைத்திற்கும், தடை விதிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மேலும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அன்று அனைத்து மீன், இறைச்சி கடைகளும் இயங்க அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தபட உள்ளதாக மக்கள் அச்சமடைந்து அத்தியாவசிய பொருள்களை வாங்கி சேமித்து வைக்கின்றனர்.

இந்தியாவில் ஒரே நாளில் 2.56 லட்சம் பேருக்கு கொரோனா – மத்திய சுகாதாரத்துறை அறிக்கை!!

மேலும் பல வியாபாரிகளும் அத்தியாவசிய பொருள்களை பதுக்கி வருகின்றனர். இதனால் பொதுமுடக்கம் நேரத்தில் அத்தியாவசிய பொருள்கள் தட்டுப்பாடு ஏற்படும் எனவே மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “பெருந்தொற்றின் காரணமாக அமலில் உள்ள தடைக்காலம் / பொது ஊரடங்கின் போது அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கு ஏதுவாக அவற்றை பதுக்குபவர்களுக்கு எதிராக பாரபட்சமற்ற, சிறிதும் சகிப்புத்தன்மையற்ற நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை நுகர்வோர் விவகாரங்கள் துறை வலியுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் மீண்டும் பொதுமுடக்கம்? பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

மேலும் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகத்தின் செயலாளர் நிதி காரே, நாடு முழுவதும் அத்தியாவசிய பொருட்களின் விலை நிலவரம் மற்றும் அவற்றின் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார்.  மேலும் பேரிடர் காலத்தில் மருந்துகள், சுகாதார மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்த்தப்படாமல் மக்களுக்கு நியாயமான விலையில் கிடைக்க வேண்டும் என விவாதிக்கப்பட்டது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு – பிரதமர் இன்று ஆலோசனை!!

மேலும் இதனை கண்காணிக்க உணவு மற்றும் பொது விநியோகம், சட்ட அளவியல், உணவு பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் காவல் ஆகிய துறைகள் அடங்கிய இணை குழுக்கள், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் மற்றும் மாவட்ட அளவில் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படலாம்”, இவ்வாறு தெரிவித்தனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!