இந்தியாவில் ஒரே நாளில் 2.56 லட்சம் பேருக்கு கொரோனா – மத்திய சுகாதாரத்துறை அறிக்கை!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காட்டு தீ போல பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், குணமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள், சிகிச்சையில் உள்ளவர்கள் குறித்த விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
மத்திய சுதாரத்துறை அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது. பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2.59 லட்சமாக உள்ளது. இது நேற்று பதிவான எண்ணிக்கையை விட குறைவாகும். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.53 கோடியாக உயர்ந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
நேற்று (ஏப்ரல் 19) நிலவரப்படி நாட்டில் கொரோனா நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு, “நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 2,59,170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,53,21,089 ஆக உயர்ந்துள்ளது.
LIC ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே வேலை – மத்திய அரசு அனுமதி!!
நேற்று ஒரு நாள் மட்டும் புதிதாக 1,761 பேர் இறந்துள்ளனர். இதனால் நாட்டில் மொத்தம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1,80,530 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 1,54,761 பேர் குணமடைந்துள்ளனர். இதன் படி குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1,31,08,582 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதித்த 20,31,977 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.