தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்? உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

0
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்? உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்? உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்? உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மதுபான கடைகள் மூடப்பட வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட வேண்டும் என தொடங்கப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

மதுபான கடைகள்:

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மதுபான கடைகள் பல நாட்கள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் ஜூன் 14 ஆம் தேதிக்கு பின்னர் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் குறிப்பிட்ட மாவட்டங்களில் மதுபான கடைகள் காலை முதல் மாலை வரை கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை பின்பற்றி திறக்கலாம் என அரசு தெரிவித்தது.

ஜூலை 5 வரை 13 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு – புதிய தளர்வுகள் அறிவிப்பு!

தமிழகத்தில் மதுபான கடைகள் மூலமாக பல குடும்பங்கள் கஷ்டப்படுகின்றனர். பல குடும்ப தலைவர்கள் குடித்து விட்டு மனைவிகளை துன்புறுத்துகின்றனர். மேலும் தமிழக அரசு வழங்கியுள்ள கொரோனா நிவாரண தொகை ரூ.2000 கொண்டு குடிக்கின்றனர். இதனால் அவர்களது குடும்ப பொருளாதாரம் பாதிக்கப்பட்டு குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

TN Job “FB  Group” Join Now

இத்தகைய கேடு விளைவிக்கும் மதுபான கடைகள் மூட மத்திய, மாநில அரசு உத்தரவிட வேண்டும் என திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யன் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். குறிப்பாக கொரோனா பரவல் காலம் என்பதால் மதுபான கடைகள் மூடப்பட வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!