ஜூலை 5 வரை 13 மாவட்டங்களில் ஊரடங்கு நீட்டிப்பு – புதிய தளர்வுகள் அறிவிப்பு!
கொரோனா 2 ஆம் அலை பாதிப்புகளை கவனத்தில் கொண்டு கர்நாடகா மாவட்டத்தில் தற்போது நடைமுறையில் உள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 5 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த பொது முடக்கத்தில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.
தளர்வுகளுடன் ஊரடங்கு
இந்தியாவின் தென் மாநிலங்களில் அதிகளவு கொரோனா தாக்கத்தை சந்தித்து வரும் மாநிலங்களில் முதன்மையாக இருப்பது கர்நாடகா மாநிலம். ஏனென்றால் கடந்த மே மாத துவக்கத்தில் இருந்து கடைபிடிக்கப்பட்டு வரும் முழு ஊரடங்கு பலனாக தற்போது அம்மாநிலத்தில் புதிய பாதிப்புகள் விகிதம் சரிந்து வருகிறது. அந்த வகையில் கர்நாடகா முழுவதும் ஜூன் 5 ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கில் அத்தியாவசிய பொருட்களின் கடைகள் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 691 சாதாரண பேருந்துகள் இயக்கம் – ஊரடங்கு தளர்வுகள் எதிரொலி!
கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா, கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகளை அறிவித்ததுடன், 5% க்கும் குறைவான பாதிப்பு விகிதம் கொண்ட 16 மாவட்டங்களில் கூடுதல் நடவடிக்கைகளுக்கு அனுமதி கொடுத்துள்ளார். இதில் பெங்களுரு மாநகரமும் அடங்கும். தவிர மாநிலம் முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள புதிய வழிகாட்டுதலின் கீழ்,
- அனைத்து கடைகள், ஹோட்டல்கள், கிளப்புகள், மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
- தவிர உணவகங்கள், லாட்ஜ்கள், ரெசார்ட்ஸ், ஜிம்கள், தனியார் அலுவலகங்கள் அனைத்தும் 50% துடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
- மேலும் மாலை 5 மணி வரை 50% இருக்கைகளுடன் ஏசி இல்லாத ஹோட்டல்கள், கிளப்புகள், உணவகங்களில் உணவருந்த அனுமதிக்கப்படுகிறது.
TN Job “FB Group” Join Now
- பேருந்துகள் மற்றும் மெட்ரோ சேவைகள் 50% இருக்கைகளுடன் அனுமதிக்கப்படுகிறது.
- இருப்பினும், ஒவ்வொரு நாளும் மாலை 7 மணி முதல் காலை 5 மணி வரை இரவு
- நேர ஊரடங்கு உத்தரவு தொடரும் எனவும் வெள்ளிக்கிழமை மாலை 7 மணி முதல் திங்கள் மாலை 5 மணி வரை வார இறுதி ஊரடங்கு உத்தரவு ஜூலை 5 வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதே நேரத்தில் ஜூன் 11 முதல் நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகள், பாதிப்பு அதிகமுள்ள மற்ற 13 மாவட்டங்களில் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.