அண்ணா பல்கலை மாணவர்கள் கவனத்திற்கு – செமஸ்டர் தேர்வு ஹால் டிக்கெட்!
அண்ணா பல்கலை சார்பில் கடந்த டிசம்பர் 2020ல் நடைபெற்ற செமஸ்டர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி மறு செமஸ்டர் தேர்வு நடத்த உயர் கல்வித்துறை முடிவு செய்தது. தற்போது மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டை பல்கலை வெளியிட்டுள்ளது.
மறு செமஸ்டர்:
தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் அச்சம் காரணமாக கடந்த 2020 டிசம்பர் மாதத்தில் மாணவர்கள் நலன் கருதி அண்ணா பல்கலை சார்பில் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் அந்த தேர்வில் வெறும் 30 சதவிகித மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்த தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதாக மாணவர்கள் குற்றம் சாட்டினார். இதனால் தற்போது மறு செமஸ்டர் தேர்வை நடத்த உயர் கல்வித்துறை முடிவு செய்தது.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்? உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
மேலும் இந்த மறு தேர்வில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் பங்கு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து அண்ணா பல்கலை மாணவர்களுக்கு மறு செமஸ்டர் தேர்வு இன்று (ஜூன் 21) முதல் தொடங்குகிறது. மேலும் இந்த தேர்வு பழைய நேர முறையில் 3 மணி நேரம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் மற்ற பல்கலை நடத்தியது போல் தேர்வுகள் நடைபெறும் என்று அண்ணா பல்கலை தெரிவித்தது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் மறு செமஸ்டர் தேர்வு மற்றும் ஏப்ரல்/மே மாத செமஸ்டர் தேர்வு (முதுகலை 2வது செமஸ்டர் தவிர்த்து) எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டை தற்போது அண்ணா பல்கலை வெளியிட்டுள்ளது. மேலும் சில வகுப்புக்கான தேர்வு கால அட்டவணையும் மாற்றப்பட்டுள்ளது. தற்போது மாணவர்கள் ஹால் டிக்கெட்டை https://coe1.annauniv.edu/home/ என்ற இணையம் மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் திருத்தப்பட்ட தேர்வு கால அட்டவணையைக் http://acoe.annauniv.edu/ என்ற தளம் மூலம் காண வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.