கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழை – 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை!
கேரள மாநிலத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக 7 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறு தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்சு அலர்ட்:
இந்தியாவில் ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூலை மாதம் வரை கோடை வெயில் சுட்டெரிக்கும். அதிக வெப்பத்தின் காரணமாக வெப்பச்சலனம் ஏற்பட்டு அவ்வப்போது மழை பொழிவும் ஏற்படும். அதன்படி நடப்பாண்டும் கோடை வெயில் கொளுத்த ஆரம்பித்தது. தமிழகம் மற்றும் புதுவையில் 100 டிகிரி வரை வெப்பம் பதிவானது. இந்த நிலையில் கடந்த மாதம் இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்தது.
Exams Daily Mobile App Download
கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு பிறகு கோடை காலத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று புயலாக உருமாறியது. இந்த அசானி புயலின் காரணமாக மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தை தொடர்ந்து தற்போது கேரளாவிலும் மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக கேரளாவில் எர்ணாகுளம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 62 ஆக அதிகரிக்கும் ஓய்வு பெறும் வயது? முதல்வரின் திட்டம் என்ன?
தற்போது நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு மாநிலத்தில் பரவலாக மழை பெய்யும் என்று கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது கணிப்பை தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கேரளாவில் தொடர் மழை பெய்து வருவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.