தமிழகத்தின் 8 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தின் 8 மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் இந்தாண்டு எதிர்பாராத அளவு இந்த மாதம் கனமழை பெய்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து 8 மாவட்டங்களில் நாளை அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை அறிவிப்பு

தமிழகத்தில் இந்தாண்டு கோடை காலத்திலும் நல்ல மழை பொழிவு காணப்பட்டது. அதனால் மக்கள் வெயிலின் தாக்கத்தில் இருந்து சற்று தணிந்தனர். அதன் தொடர்ச்சியாக தமிழகம் மற்றும் புதுவையில் நல்ல மழை பெய்து வருகிறது. தற்போது வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றம் காரணமாக தென்மேற்கு பருவமழை பெய்ய தொடங்கியுள்ளது. பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தாலும் மாலையில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர் கனமழையினால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. வாகன ஓட்டிகள், பள்ளி செல்லும் குழந்தைகள் பணிக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

Exams Daily Mobile App Download

நேற்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்தது. அதனை தொடர்ந்து இன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் நாளை மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதே போல ஈரோடு, கரூர், தஞ்சாவூர், அரியலூர், கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ள கூறப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் ஆக.19 ல் பொது விடுமுறை அறிவிப்பு – அரசு அதிரடி

மேலும் திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கடலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்த வரை நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!