அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த இரண்டு வாரத்திற்கும் மேலாகவே அதிகனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கனமழை:
இந்தியாவில் தற்போது பருவமழை காலம் என்பதால் பல மாநிலங்களில் கனமழை வெளுத்துவாங்கி கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக உத்திரப்பிரதேசம், கேரளா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் அதிக அளவில் மழைப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. மேலும், அதி கனமழையின் காரணமாக மழைநீர் சாலைகளில் தேங்கி சாலை போக்குவரத்திற்கும் இடையூறாக அமைகிறது. மேலும், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல உயிர்களும் பலியாகியுள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே கனமழையினால் பல்வேறு பேரழிவு நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மேலும், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பல பகுதிகளில் அடுத்த ஐந்து நாட்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் எனவும் ஒரு சில பகுதிகளில் லேசான மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது மட்டுமல்லாமல் நகரின் பல பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுத்து எச்சரித்துள்ளது.
தமிழக மாணவ, மாணவிகளுக்கு ரூ.7000 வரை கல்வி உதவித்தொகை – ஆட்சியர் அறிவிப்பு!
மேலும், சம்பவத், நைனிடால், உதம் சிங் நகர், டேராடூன், தெஹ்ரி கர்வால், பவுரி கர்வால் மற்றும் ஹரித்வார் ஆகிய பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதை தவிர மற்ற பகுதிகளில் ஆங்காங்கே இடி மின்னலுடன் கூடிய கனமழையும், லேசான, மிதமான மழைப்பொழிவும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளதால் முடிந்த அளவிற்கு பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.