தமிழக மாணவ, மாணவிகளுக்கு ரூ.7000 வரை கல்வி உதவித்தொகை – ஆட்சியர் அறிவிப்பு!
தமிழக பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ – மாணவிகளுக்கு ஒவ்வொரு வருடமும் கல்வி உதவித் தொகையை வழங்கி வருகிறது தமிழக அரசு. இத்திட்டமானது தொடக்கக் கல்வியில் தொடங்கி, பட்ட மேற்படிப்பு வரை வழங்கப்படும். இந்த உதவித்தொகையினைப் பெற சில ஃபார்முலாக்கள் இருக்கின்றன. இதனை குறித்து மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா வெளியிட்டுள்ள தகவலை பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
கல்வி உதவித் தொகை :
தமிழக அரசு தொடர்ந்து கல்விக்காக பல நலத்திட்டங்களை நடைமுறையில் செயல்படுத்தி வந்த வண்ணமாக இருக்கும் நிலையில் தற்போது மாற்றுத்திறனாளி குழந்தைகளை படிக்க ஊக்குவிக்கும் வகையிலும் புது சிறப்பம்சங்களை செய்து வருகிறது. அதாவது ஒவ்வொரு வருடமும் ஒரு குறிப்பிட்ட தொகை அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு உதவி தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. அதே போல் இந்த வருடமும் (2022 – 2023) அவர்களுக்கான கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் முறைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இரா. லலிதா சிலவற்றை கூறியுள்ளார்.
Exams Daily Mobile App Download
அதில் அவர் கூறியதாவது: நடப்பு ஆண்டுக்கான கல்வி உதவித்தொகையை பெற தகுதியான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. ஓராண்டிற்கு ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.1000 மற்றும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.3000 ம், ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியருக்கு ரூ.4000 ம் எனவும், இளங்கலை படிப்புக்கு ரூ.6000 மற்றும் முதுகலை பட்டப்படிப்பு, தொழில்நுட்ப கல்வி, தொழிற்கல்வி, மருத்துவம் மற்றும் பொறியியல் தொழிற்கல்விக்கு ரூ.7000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது.
இந்திய வங்கிகளில் அதிகரிக்கும் வட்டி விகிதம் – பணவீக்கம் எதிரொலி! முழு விவரம் இதோ
மேலும், பார்வையற்றோருக்கு வாசிப்பாளா் உதவித்தொகையாக 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை ரூ.3000, இளங்கலை பட்டப்படிப்புக்கு ரூ.5000, முதுகலைப் பட்ட வகுப்பு மற்றும் தொழில் படிப்புகளுக்கு ரூ.6000 என வழங்கப்படுகிறது. இவ்வாறு மேற்குறிப்பிட்டுள்ள உதவித்தொகையை பெற அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள், தொலைதூரக்கல்வி, பயிற்சி நிறுவனங்களில் பயிலும் மாற்றுத்திறன் மாணவ-மாணவிகள் முந்தைய கல்வியாண்டு இறுதித் தோ்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் பெற்றிருக்கவேண்டும் எனவும், பிற துறைகளில் கல்வி உதவித்தொகை ஏதும் பெறவில்லை என தலைமையாசிரியா், கல்லூரி முதல்வரால் சான்றிதழ் அளிக்கப்பட வேண்டும் என சில விதிமுறைகளையும் அவர் கூறியுள்ளார்.