தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 900 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் – மாநகராட்சி முடிவு!
தமிழகத்தில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ள நிலையில் சுமார் 900 தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது . இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்:
சென்னை மாநகராட்சியில் அரசு சார்பில் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 281 பள்ளிகள் இயங்கி வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளாக தனியார் பள்ளிகள் மீது இருந்த மோகம் மற்றும் ஆங்கில ஆக்கிரமிப்பு காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது. அதன் படி அரசு பள்ளிகளில் படித்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 83 ஆயிரம் வரை குறைந்தது. அதனால் அதற்கு தகுந்தவாறு ஆசிரியர் எண்ணிக்கையும் குறைந்தது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பெரும் பாதிப்படைந்துள்ளனர். தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் கொடுக்க முடியாத நிலை காரணமாக தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்களை மாநகராட்சி பள்ளிகளில் சேர்க்கத் தொடங்கி இருக்கின்றனர். இதன் காரணமாக மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 2020-21 கல்வியாண்டில் ஒரு லட்சத்தை கடந்தது.
அடுத்த 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
2010-11 கல்வியாண்டில் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 320 ஆக இருந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பின் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இந்த ஆண்டு ஒரு லட்சத்து 7 ஆயிரமாக மாணவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்ந்துள்ளது. அதனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு ஆசிரியர்களின் எண்ணிக்கை இல்லாமல், குறைவாக இருப்பதால் தேவையான ஆசிரியர்களை நியமிக்க மாநகராட்சி திட்டமிட்டிருந்தது.
அது குறித்து ஆலோசனைக் கூட்டமும் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. அதில் மாநகராட்சி பள்ளிகளில் ஆசிரியர் தேவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. அதன்படி, 900 ஆசிரியர்கள் தேவை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரியர்களை தற்காலிகமாக நியமனம் செய்ய இருப்பதாகவும் இது குறித்து மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பள்ளி மேலாண்மைக் குழுக்களின் ஒப்புதல் அடிப்படையிலேயே இந்த ஆசிரியர்கள் நியமனம் நடைபெறும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.