தமிழகத்தின் 20 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கும் என கீழே உள்ள பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
கனமழை:
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 29 ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு முன்கூட்டியே தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பருவமழை 103 விழுக்காடாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக தெற்கு மற்றும் மத்திய இந்திய பகுதிகளில் மழை பொழிவு அதிகமாக இருக்கும் என்றும், வடகிழக்கு பகுதிகளில் குறைவாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இதற்கிடையே தமிழகத்தில் பல மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு சில வாரமாக தமிழகத்தில் அநேக இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்தியாவில் மும்பை, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கன மழை மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டி போட்டது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தொடர்ந்து உயர்ந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை – கவலையில் பொது மக்கள்
அந்த வகையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 20 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ,மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.