தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும் அறநிலைய துறையில் ரூ.58,600/- ஊதியத்தில் வேலை !
இந்து சமய அறநிலையத்துறையில் இருந்து வெளியான வேலைவாய்ப்பு அறிவிப்பில் தென்காசி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் ஓதுவார் (தேவாரம்) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) |
பணியின் பெயர் | ஓதுவார் (தேவாரம்) |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 31.08.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
இந்து சமய அறநிலையத்துறை காலிப்பணியிடங்கள்:
தென்காசி மாவட்டம், அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில் காலியாக உள்ள ஓதுவார் (தேவாரம்) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
Exams Daily Mobile App Download
ஓதுவார் தகுதிகள்:
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத மற்றும் படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர் மாநில அரசு அல்லது மாநில அரசு அனுமதி பெற்ற நிறுவனங்களில் தேவாரம் ஓதுவதில் பட்டம் அல்லது தேவாரம் பாடுவதில் சான்றிதழ் பெற்றவராக இருப்பது அவசியமானது ஆகும்.
ஓதுவார் வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய நாளின் படி, குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
ஓதுவார் ஊதியம்:
ஓதுவார் (தேவாரம்) பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.18,500/- முதல் அதிகபட்சம் ரூ.58,600/- வரை மாத ஊதியமாக தரப்படும்.
தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center
TNHRCE தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
TNHRCE விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் திருக்கோயில் வளாகத்தில் இப்பணிக்கான விண்ணப்பத்தை பெற்று அதை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று சமர்ப்பிக்கலாம் அல்லது தபால் செய்யலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள் (31.08.2022) மட்டுமே கால அவகாசம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.