சென்னை: தொடர்ந்து உயர்ந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலை – கவலையில் பொது மக்கள்!
தமிழகத்தில் இன்று காலை நேர நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை ரூ. 304 உயர்ந்துள்ளது. கடந்த 5 நாட்களாகவே தங்கம் விலை அதிகரித்து வருவது நகைப்பிரியர்கள் மத்தியிலும், திருமணத்திற்கு நகைகள் வாங்குவோர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கம் விலை:
இந்தியாவில் கடந்த வருடம் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் உயர்ந்த தங்கம் விலை தற்போது வரை குறையவில்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆபரணத் தங்கத்தின் விலை அமெரிக்க டாலரின் மதிப்பை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஏற்பட்ட உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போரின் விளைவால் கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. மேலும் பங்குச்சந்தையும் சரிந்து வருகிறது. அதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கி விட்டனர். அதனால் உலகம் முழுவதும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இதனையடுத்து தங்கத்தின் ஏற்றுமதியும், இறக்குமதியும் அதிகரித்துள்ளது. உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடு இந்தியா தான். இந்த நிலையில் மத்திய அரசின் ஜிஎஸ்டி மற்றும் இறக்குமதி வரி உயர்வால் தங்கம் விலையானது இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 21ம் தேதி நிலவரப்படி ஒரு கிராம் தங்கம் ரூ.4,630க்கும் ஒரு சவரன் ரூ.37,040க்கும் விற்கப்பட்டது. அதனை தொடர்ந்து 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 256 அதிகரித்து ஒரு சவரன் ரூ.38,136-க்கு விற்பனை செய்யப்பட்டது.
EPFO கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – நாமினியை இணைப்பது எப்படி
அதன் தொடர்ச்சியாக இன்றும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ. 38, 440 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.38 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,805க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக 7 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,400 வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதே போல சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1.10 உயர்ந்து அது ரூ.62.30 ஆக உயர்ந்துள்ளது.