11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம்!
இந்தியாவில் பருவ மழை தொடங்கியுள்ளதால் வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து மஹாராஷ்டிராவின் 11 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனமழை;
இந்தியாவில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால் கர்நாடக, கேரளா, மஹாராட்டிரா, கோவா உள்ளிட்ட மாநிலங்களில் இரவு பகலாக கனமழை பெய்து வருகிறது. தற்போது மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இடைவிடாது மழை பெய்து வருவதால் பொது இடங்கள் மற்றும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. 24 மணி நேரத்தில் மும்பை கொலாபாவில் 2.4 செ.மீ., புறநகர் சாந்தாகுருஸ் பகுதியில் மட்டும் 4.5 செ.மீ மழை அளவு பதிவாகி உள்ளது. இதனால் சாலைகளில் தேங்கிய தண்ணீரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் மும்பையின் சுனாபட்டி பகுதியில் உள்ள மலையில் ஏற்பட்ட நிலச்சரிவால் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் சேதமடைந்தது.
Exams Daily Mobile App Download
அம்மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இதுவரை 89 பேர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தேரி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் வேறு சாலைகளில் திருப்பி விடப்படுகிறது. மேலும் இதனால் மழையால் வாகனங்கள் ஊர்ந்து செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் கோலாப்பூர், பால்கர், நாசிக், புனே மற்றும் ரத்னகிரி மாவட்டங்களுக்கு நாளை வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல் – இதற்காக தான்? அரசு அறிவிப்பு!
அதனை தொடர்ந்து அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு தீவிர மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மும்பை-புனே நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பாறாங்கற்கள் சாலையில் விழுந்து மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. தற்போது மும்பை, புனே உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் தீவிர கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. கட்சிரோலி மாவட்டத்தில் பெய்த மழையால் ஆறு, குளங்கள் நிரம்பி அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.