மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல் – இதற்காக தான்? அரசு அறிவிப்பு!
மாநிலம் முழுவதும் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக புனே மாவட்டத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலா தலங்களில் 144 பிரிவின் கீழ் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவு
மகாராஷ்டிரா மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையானது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை முடக்கி இருக்கிறது. அந்த வகையில் புனே மாவட்டத்தில் அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புகள் இருப்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்போது கனமழையை கருத்தில் கொண்டு, தனியார் நிறுவனங்கள் அனைத்தும் வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை பின்பற்ற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதே போல சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூடுவதை தடை செய்யும் விதமாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது தவிர புனே மாநிலத்தில் நாளை (ஜூலை 15) பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்வி நிறுவனங்களும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது புனேவில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாவட்டம் முழுவதும் உள்ள சுற்றுலாத் தலங்களில் 4 பேருக்கு மேல் கூடுவதைத் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (ஜூலை 15) கல்வி அதிகாரிகள் கூட்டம் – முக்கிய தகவல்!
அதன்படி, அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களும் இனி வீட்டில் இருந்து வேலை செய்யும் முறையில் செயல்படுமாறு புனே முனிசிபல் கம்யூனிகேஷன் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கிடையில் கனமழை காரணமாக புனே மாவட்டம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பிம்ப்ரி சின்ச்வாட் பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை (ஜூலை 15) ஒருநாள் மட்டும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன் கனமழையால் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கும் விதமாக புனே மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.