தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை – வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகத்தில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரைக்கும் சில மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கை
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், சில மாவட்டங்களில் அவ்வப்போது லேசான முதல் மிதமான மழைப்பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் வட மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும், கோயம்புத்தூர் மற்றும் புதூர் பகுதிகளில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அது போல, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வரும் ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் லேசான முதல் மிதமான மழைப்பொழிவு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்த வரைக்கும் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைப்பொழிவு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி உதவித்தொகை பெற்று வரும் மாணவர்களின் கவனத்திற்கு – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலையாக 36 முதல் 37 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவும் எனவும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 27 முதல் 28 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் அதி வேகமாக காற்று வீசும் என்பதால் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரைக்கும் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும், கடலோர பகுதியில் வசிக்கும் மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதே போல, இன்றும் நாளையும் குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்தமிழக கடலோர பகுதிகளில் அதிவேக காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது.