கல்வி உதவித்தொகை பெற்று வரும் மாணவர்களின் கவனத்திற்கு – நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
கல்வி பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற்ற பிறகு இடைநிற்றல் ஏற்பட்டதாக சான்றிதழை கொடுக்க மறுப்பது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. நர்சிங் கல்லூரி மாணவி தொடர்ந்த வழக்கினை அடுத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் செயல்பட தொடங்கியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற 10,12 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெற்ற நிலையில் ஜூன் மாதம் பொது தேர்வு முடிவுகள் வெளியாகின. இதனால் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் நடப்பு ஆண்டிற்கான வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
Exams Daily Mobile App Download
தமிழக கல்லூரிகளில் கவுன்சிலிங் நடைபெற்று முடிவடைந்த நிலையில் மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கல்வி பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற்ற பிறகு இடைநிற்றல் ஏற்பட்டதாக சான்றிதழை கொடுக்க மறுப்பது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளை முக்கிய தீர்ப்பினை வழங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன் கோவிலில் உள்ள நர்சிங் கல்லூரியில் சங்கீதா என்ற மாணவி படித்து வந்த நிலையில் அவர் சூழ்நிலையின் காரணமாக கல்லூரியிலிருந்து படிப்பை பாதியில் நிற்க கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கல்லூரி சேர்க்கையின் போது கொடுக்கப்பட்ட மாணவியின் மாற்று சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல் போன்றவற்றை கல்லூரி நிர்வாகம் தர மறுத்துள்ளது.இதனை தொடர்ந்து சான்றிதழ்களை திரும்பி கொடுக்குமாறு கல்லூரி நிர்வாகத்தின் மீது மாணவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் வழக்கில் கல்லூரி ஆஜரான வழக்கறிஞர் மாணவி தாழ்த்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் சேர்ந்து அதற்கான கல்வி உதவி தொகையை பெற்றுள்ளார்.
தமிழகத்தில் ஆக.15 வரை கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
இடைநிற்றலால் பெறப்பட்ட உதவி தொகையை அவர் திரும்ப கல்லூரிக்கு கொடுக்க வேண்டும். அதை தவறியதற்காக அவரது சான்றிதழ்களை கொடுக்கவில்லை என்று கல்லூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உயர்நீதிமன்றம், மாணவியின் மீது கல்லூரி நிர்வாகம் சட்டரீதியான நடவடிக்கை எடுத்து கொள்ளலாம் என்றும் மாணவிக்கான சான்றிதழ்களை உடனடியாக திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.