தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 35 மாவட்டங்களில் கனமழை பெய்யும் – வானிலை அறிக்கை!
தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் கோடைக் காலமாக இருந்தது. இருப்பினும், கடந்த நாட்களை காட்டிலும் இன்று வெப்பம் குறைவாக இருந்தது. இதனிடையே கடந்த சில நாட்களாகவே மாநிலத்தில் கணிசமாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில், மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
வானிலை அறிக்கை:
தமிழகத்தில் வழக்கமான ஏப்ரல், மே மாதங்களில் வெயில் கொளுத்தும். குறிப்பாக, மே மாதம் அக்னி நட்சத்திர காலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அளவுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும். இந்நிலையில், நடப்பாண்டில் மார்ச் மாதத் தொடக்கத்திலேயே சில மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த மாதம் அக்னி நட்சத்திரம் காரணமாக தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் இருந்தது.
Exams Daily Mobile App Download
அத்துடன் தற்போது அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையிலும் வெயிலின் தாக்கம் தற்போது குறையாமல் உள்ளது. இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்கிறது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச் சலனத்தால் பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் இரட்டிப்பாகும் கொரோனா தொற்று – புதிய கட்டுப்பாடுகள் அமல்!
மேலும் நேற்று, நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்தது. இந்நிலையில் இன்று தமிழ்நாட்டில் சென்னை உட்பட 35 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை என 35 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என தகவல் தெரிவித்துள்ளது.