தமிழகத்தில் நாளுக்கு நாள் இரட்டிப்பாகும் கொரோனா தொற்று – புதிய கட்டுப்பாடுகள் அமல்!

0
தமிழகத்தில் நாளுக்கு நாள் இரட்டிப்பாகும் கொரோனா தொற்று - புதிய கட்டுப்பாடுகள் அமல்!
தமிழகத்தில் நாளுக்கு நாள் இரட்டிப்பாகும் கொரோனா தொற்று - புதிய தமிழகத்தில் நாளுக்கு நாள் இரட்டிப்பாகும் கொரோனா தொற்று - புதிய கட்டுப்பாடுகள் அமல்!அமல்!
தமிழகத்தில் நாளுக்கு நாள் இரட்டிப்பாகும் கொரோனா தொற்று – புதிய கட்டுப்பாடுகள் அமல்!

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்துக்கொண்டே செல்வதால் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு சுகாதாரத்துறை அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும், இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியையும் போட்டுக் கொள்ளும்படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று:

இந்தியாவிலுள்ள பல மாநிலங்களில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமலில் இருந்தும் கூட நாளுக்குநாள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகி கொண்டிருக்கிறது. மற்ற மாநிலங்களை விட மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிக அளவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

Exams Daily Mobile App Download

இதனால் முடிந்த வரைக்கும் பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயமாக மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரண்டு தவணைக்கான கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ளாதவர்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், விமானத்தில் பயணிக்கும் பயணிகள் இரண்டு தவணை தடுப்பூசி சான்றிதழை காண்பித்தால் மட்டுமே விமானத்தில் பயணிக்க முடியும். மேலும் விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் பெயர், முகவரி, மொபைல் எண் என அனைத்து விபரங்களும் விமானநிலையத்தில் சேகரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகளை தயார் நிலையில் வைக்கும்படி மருத்துவ நிர்வாகங்களுக்கு சுகாதாரத்துறை அமைப்பு எச்சரித்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலுமே கொரோனா வேகமெடுத்து கொண்டிருக்கிறது. இதனால் கூடிய விரைவில் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் பரவி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!