இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் 250+ பணியிடங்கள் – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனம் Trade Apprentice பணியிடங்களில் தகுதியான நபர்களை நியமிக்க உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் தற்போது கால அவகாசத்தை நீட்டித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கால அவகாசம் நீட்டிப்பு
இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (HCL) நிறுவனத்தில் பல்வேறு வகையான துறைகளில் Trade Apprentice பணியிடங்களில் காலியாக இருக்கும் 290 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு/ 12 ஆம் வகுப்பு/ ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Follow our Instagram for more Latest Updates
அத்துடன் விண்ணப்பதாரர்கள் ITI மற்றும் 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நவம்பர் 22ம் தேதி அதாவது இன்று (12.12.2022) வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
IITs, IIMs, மத்திய பல்கலைக்கழகங்களில் 11,000 காலிப்பணியிடங்கள் – அமைச்சரின் சூப்பரான தகவல்!!
Exams Daily Mobile App Download
அதன்படி இன்றுடன் இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் முடிவடைந்த நிலையில், தற்போது Trade Apprentice பணியிடத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை ஒரு வாரம் வரை நீட்டித்து HCL நிறுவனம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்நிறுவனத்தின் Trade Apprentice பணியிடத்திற்கு வருகிற 19ம் தேதி வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள நேரடி இணைப்பை பயன்படுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம்.