இந்தியாவில் சிகரெட் விற்பனைக்கு தடை? மத்திய அரசு எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை!
இந்தியாவில் நாளுக்கு நாள் புகைபிடித்தல் பழக்கத்திற்கு அடிமையாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சிகரெட் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.
சிகரெட்
இந்தியாவில் ஆண்கள் முதல் பெண்கள் வரை அனைவரும் புகைப்பிடித்தலுக்கு அடிமையாகி உள்ளனர். புகைப்பிடித்தல் பழக்கத்திற்கு அடிமையாகுபவர்களில் 50% பேர் இறப்பை சந்திக்கின்றனர். இவர்களுக்கு நுரையீரல் சார்ந்த பிரச்சினை மற்றும் புற்றுநோய், மாரடைப்பு போன்ற பலவித நோய்கள் ஏற்படுகிறது. அதனால் மக்களை புகைப்பிடித்தல் பழக்கத்திலிருந்து மீட்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு சட்டங்களை கொண்டு வந்துள்ளது.
Exams Daily Mobile App Download
இதனை மீறியும் இந்தியாவில் நாளுக்கு நாள் புகைப்பிடித்தல் பழக்கத்திற்கு அடிமையாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசு ஒற்றை சிகரெட் விற்பனை தடை செய்யவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாதாரணமாக கடைகளில் விற்கப்படும் ஒற்றை சிகரெட் விற்பனை புகைப்பிடித்தல்பழக்கத்தை அதிகப்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு ஒற்றை சிகரெட் விற்பனை தடை செய்ய வேண்டும் என்று நாடாளுமன்ற நிலை குழு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்.. பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு No Chance – மத்திய அரசின் பதில்!
Follow our Instagram for more Latest Updates
மேலும் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் புகைப்பிடித்தல் பகுதிகளை நீக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளது. ஏற்கனவே உலக சுகாதார அமைப்பு சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான வரியை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது நாடாளுமன்ற நிலை குழுவின் வழங்கிய பரிந்துரையின் படி மத்திய நடவடிக்கை மேற்கொண்டால் இந்தியாவில் ஒன்றை சில்லைறை விற்பனை முற்றிலும் தடை செய்யப்படும்.