தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி பொருட்கள் தரத்தை கண்காணிக்க குழு!
காஞ்சிபுரம் மாவட்டம் அருகே செங்காடு கிராமத்தில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி அன்று தேசிய பஞ்சாயத்து தினத்தையொட்டி நடைபெற்ற பேரவையில், முதலமைச்சர் மு. ஸ்டாலின் கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது பெரும்பாலானோர் நியாயவிலைக் கடைகளில் தரமற்ற அரிசி வழங்குவதாக முதலமைச்சரிடம் புகார் தெரிவித்தனர். இது குறித்து தமிழக முதல்வர் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.
முக்கிய உத்தரவு:
தமிழ்நாடு அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் எவ்வித தடையுமின்றி கிடைத்து வருகிறது. தமிழகத்தில் 2.19 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றுக்கு கூட்டுறவு உணவுத் துறையின் கீழ் செயல்படும் 35,296 ரேஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேலும் நியாய விலை கடைகளில் தொடர்ந்து மோசடி நடப்பதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளன. அதை தடுக்க தமிழக அரசும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB Group” Join Now
அண்மையில் நடந்த தேசிய பஞ்சாயத்து தினம் அன்று நடந்த பேரவையில் ,பொதுமக்கள் பெரும்பாலானோர் நியாயவிலைக் கடைகளில் தரமற்ற அரிசி வழங்குவதாக முதலமைச்சரிடம் புகார் தெரிவித்தனர். இந்த புகாருக்கு செவி சாய்த்த முதல்வர், தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்ய அனைத்து மாவட்டங்களிலும் 4 அதிகாரிகள் கண்காணிப்பு குழு அமைத்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் பேரில் இந்த குழு மாதந்தோறும் மற்றும் 3- திங்கள், ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குதல் மற்றும் குடோன்களில் இருந்து பெறுதல், சரியான விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுதல் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து விவரங்களை உணவு வழங்கல் ஆணையருக்கு அனுப்ப வேண்டும்.
இதையடுத்து இலவசமாக வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்து தொடர்ந்து புகார் வந்து கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் கடந்த சில வாரங்களில் தரமற்ற அரிசியை பொதுமக்களுக்கு விநியோகம் செய்த ரேஷன் கடை விற்பனையாளர்கள், செயலர்கள் என மொத்தம் 27 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். மேலும் இது குறித்து சாமானிய மக்கள் கூறியது விவசாயிகளிடமிருந்து உரிய நேரத்தில் நெல்களை கொள்முதல் செய்வதில்லை இதன் காரணமாகவே தரமில்லாத அரிசி வினியோகிக்கப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் (MI) ரசிகர்கள் கவனத்திற்கு – GTக்கு எதிரான போட்டி கணிப்பு! உத்தேச 11 அணி!
நேரடி நெல் நிலையத்தில் விவசாயிகள் தரப்பில் கொடுக்கப்படும் நெல்கள் அனைத்தும் தரமானது தான். ஆனால் அவர்களிடம் கொள்முதல் செய்வதில் மிகுந்த காலதாமதம் ஆகிறது. இதனால் அதன் தன்மை மங்கி விடுகிறது. அதனால் தான் பொதுமக்களுக்கு தரமற்ற அரிசி விநியோகிக்கப்படுகிறது. எனவே விவசாயிகளிடமிருந்து நெல்களை கொள்முதல் செய்வதோடு அதை உரிய முறையில் விநியோகம் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.