ரயில் பயணிகளுக்கு ஹாப்பி நியூஸ் – தெற்கு ரயில்வே நிர்வாகம் சூப்பர் அறிவிப்பு!
ரயில் பயணிகளுக்கு திடீரென ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்படும் சமயத்தில் முதலுதவி அளிக்க ரயில் நிலையங்களிலும் இலவசமாக முதலுதவி வழங்க இலவச மருத்துவ மையம் அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் தற்போது உள்ள 10 ரயில்வே நிலையங்களில் அவசரகால இலவச சிகிச்சை மையம் நிறுவப்பட்டுள்ளது.
இலவச மருத்துவ உதவி மையம்:
ரயில் பயணிகளின் வசதிக்காக அவ்வப்போது இந்திய ரயில்வே பல நலத்திட்டங்களை செய்து வருகிறது. அதாவது ரயில் நிலையத்தில் ஓய்வு அறை, லிஃப்ட் வசதி, எஸ்கலேட்டர் வசதி, சிசிடிவி கேமராக்கள் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் அதிகமாக பயணிகள் வந்து செல்லும் ரயில் நிலையங்களில் மட்டும் அவசரகால இலவச மருத்துவ உதவி மையங்களை ஏற்படுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட சில பகுதிகளில் தற்போதைக்கு அவசரகால இலவச மருத்துவ உதவி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
Exams Daily Mobile App Download
ரயில் பயணிகளுக்கு திடீரென ஏதேனும் காயம் ஏற்பட்டாலோ, மாரடைப்பு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட சில உபாதைகளுக்கு முதலுதவி தேவைப்படும் நேரத்தில் பயணிகள் இந்த இலவச மருத்துவ உதவி மையம் மூலமாக முதலுதவி பெற்றுக் கொள்ளலாம். மேலும், இந்த முதலுதவி மையங்களில் முதலுதவிக்கு தேவைப்படும் அனைத்து மருந்துகளும் சிகிச்சை முறைகளும் உள்ளன. எந்த நேரத்திலும் ஒரு மருத்துவரும் இரண்டு செவிலியர்களும் அந்த இலவச மருத்துவ முகாமில் பணியாற்றி வருகின்றனர்.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி தடையில்லா எண்ணெய் விநியோகம்!
சென்னை தவிர மதுரை, திண்டுக்கல், ராமேஸ்வரம், தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், காரைக்குடி, பழனி, விருதுநகர் போன்ற 10 ரயில் நிலையங்களிலும் இலவச மருத்துவ மையங்கள் அமைக்க தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அவசர கால இலவச மருத்துவ மையம் ரயில் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், அடுத்தடுத்த ரயில் நிலையங்களில் இதுபோன்ற இலவச மருத்துவ மையங்களை அமைக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு கொண்டிருக்கிறது.