தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி தடையில்லா எண்ணெய் விநியோகம்!

0
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி தடையில்லா எண்ணெய் விநியோகம்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - இனி தடையில்லா எண்ணெய் விநியோகம்!
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – இனி தடையில்லா எண்ணெய் விநியோகம்!

தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் ரேஷன் அட்டைகள் மூலமாகவே வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் இயங்க கூடிய ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு சரியான முறையில் பாமாயில் வழங்க ஆட்சியர் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

ரேஷன் அட்டைகள்:

தமிழக மக்கள் பலர் அரசின் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் ரேஷன் கடைகளை நம்பி இருக்கின்றனர். தற்போது அமலில் இருக்கும் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் மூலமாக மக்கள் எந்த இடத்திலிருந்தும் ரேஷன் பொருள்களை வாங்கி கொள்ளலாம். மக்கள் அத்தியாவசிய பொருள்களை மாதந்தோறும் வாங்க ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக கைரேகை வைத்து பொருள்களை மக்கள் வாங்கி கொள்ளலாம். ரேஷன் கடைகளில் மலிவு விலை உணவு பொருள்கள் மட்டுமல்லாமல், தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில் அரசின் ஊக்கத்தொகைகளும், வெள்ள நிவாரணம் போன்ற பேரிடர் கால நிவாரணமும் வழங்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

மேலும் குடும்பத்தில் இருப்பவர்கள் புதிதாக திருமணம் முடிந்திருந்தால் புதிதாக ரேஷன் அட்டைகளை பெற விண்ணப்பிக்கலாம். புதிதாக வழங்கப்படுகின்ற ரேஷன் கார்டுகள் உணவு பொருள் வழங்கல் துறையின் மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தின் மூலமாக ஆக்டிவேட் செய்யப்பட வேண்டும். அவ்வாறு செய்த பின்னரே ரேஷன் கடைகளில் பொருள்களை வாங்கலாம். இந்நிலையில் ரேஷன் பொருள்கள் பற்றியும் அதை வழங்குவது பற்றியும் பல புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது

மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பாமாயில் சரியாக வழங்கப்படுவதில்லை என மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்தது. அதனை தொடர்ந்து ஆட்சியர் மோகன் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அதில் எவ்வளவு பாமாயில் எண்ணெய் இருப்புகள் இருக்கிறது என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்டத்திற்கு குறைந்த அளவான 6000 லிட்டர் எண்ணெய் மட்டுமே இருப்பு இருப்பதாகவும், கூடுதலாக 21000 லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரேஷன் அதிகாரி தெரிவிக்க, குடும்ப அட்டைதாரர்களுக்கு விடுபடாமல் எண்ணெய் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்குவதில் முறைகேடுகள் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!