தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்துகளிலும் இனிமேல் அடுத்து வரும் பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்பை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க இருப்பதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்து உள்ளார்.
பேருந்து பயணம்:
தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் தங்கள் தேர்தல் வாக்கு உறுதியில் பல திட்டங்களை செயல்படுத்த இருப்பதாக தெரிவித்து இருந்தது. அதில் முக்கியமாக, பெண்களுக்கு இலவச பேருந்து திட்டமும் உள்ளது. அதனை ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வர் முதலில் போடப்பட்ட 5 கையெழுத்தில் மகளிருக்கு உள்ளூர் பேருந்துகளில் இலவச பயணத் திட்டமும் ஒன்று. இத்திட்டத்தின் மூலம் கிராமம், நகரம், பெருநகரம் என நாளொன்றுக்கு சுமார் 5 லட்சம் பெண்கள் பயன்பெறுகின்றனர். இதன் மூலம் பெண்கள் மிகவும் பயன்பெற்று வருகின்றனர்.
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
இவ்வாறு தமிழக அரசு பல திட்டங்களை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது சமீபத்தில் புதிதாக தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக பதவியேற்ற சிவசங்கர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். அது என்னவென்றால், இப்பொழுது மக்கள் தங்கள் ஊர்களில் இருந்து வேறு ஊர்களுக்கு செல்லும் போது அவர்களுக்கு பேருந்தில் பயணம் செய்ய மிகவும் கஷ்டப்படுகின்றனர். இதனை போக்கவே தற்போது அவர்களுக்காக இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
கால்நடை பராமரிப்புத்துறையில் உதவியாளர் காலிப்பணியிடங்கள் – ஏப்ரல் 23 நேர்காணல்!
இந்த நிலையில் அமைச்சர் கூறிய அறிவிப்பு, பேருந்துகளில் அடுத்து வரும் பேருந்து நிறுத்தம் குறித்த அறிவிப்பை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிறுத்தங்களை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நடவடிக்கை மேற்கொண்டார். முதற்கட்டமாக சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் 500 பேருந்துகளில் ஒலிபெருக்கி அமைக்கப்படவுள்ளது என்றும் அறிவித்து உள்ளார்.