தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு - கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு - கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வு – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இறுதித் தேர்வுகள் நடைபெற உள்ள தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார். இதனால் மாணவர்கள் முனைப்புடன் படித்து வருகின்றனர்.

1 முதல் 9 ஆம் வகுப்பு வரை இறுதி தேர்வுகள்:

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக 2020ஆம் ஆண்டில் இருந்து பள்ளிகளும், கல்லூரிகளும் அரசின் ஊரடங்கின் காரணமாக மூடப்பட்டது. அதன் பின்னர் நிறைய தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடு குறைந்ததை தொடர்ந்து, பல மாதங்களுக்கு பிறகு சென்ற ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் துவங்கப்பட்டு நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இதனை தொடர்ந்து 1 முதல் 8 ஆம் வகுப்புகளும் தொடங்கப்பட்டது. இந்த வருடம் கண்டிப்பாக 10, 11 மற்றும் 12 படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் இருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொதுத் தேர்வுக்கான தேதிகளை அறிவித்தார்.

கால்நடை பராமரிப்புத்துறையில் உதவியாளர் காலிப்பணியிடங்கள் – ஏப்ரல் 23 நேர்காணல்!

இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5ஆம் தேதி தொடங்கி, மே 28 ஆம் தேதி முடியும் எனவும், அதன் செய்முறை தேர்வுகள் ஏப்ரல் 25ஆம் தேதி முதல் மே 2ஆம் தேதி வரை நடைபெறும் என்றும், 10 வகுப்பு பொதுத் தேர்வுகள் மே 10 ஆம் தேதியில் இருந்து 30 வரை நடைபெற உள்ளது. 11 வகுப்பு தேர்வுகள் மே 9 முதல் 31 தேதி வரை பொதுத் தேர்வுகள் நடக்க உள்ளது. மேலும் இதன் தேர்வு முடிவுகள் 12ஆம் வகுப்பிற்கு ஜூன் 23 ஆம் தேதியிலும், 11 ஆம் வகுப்புக்கு ஜூலை 7 ஆம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூன் 17 ஆம் தேதியும் வெளியாகும் என்றும் அறிவித்து இருந்தார். மேலும் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை ஆண்டு இறுதித் தேர்வுகள் குறித்த தேதிகளை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதில் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு மே மாதம் இறுதி தேர்வுகள் நடக்க இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார். மேலும் இந்த தேர்வுகள் முடிந்த பிறகு விடுமுறையும் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மே 2 முதல் ஜூன் 12ம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!

இந்த நிலையில் தற்போது 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுக்கான தேதிகளை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை. இதை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது, 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளில் தேர்வு நடைபெறும். அதற்கான வினாத்தாள் தயாரிப்பு உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அந்தந்த பள்ளிகளே தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும், ஆனால் இன்னும் அதற்கான தேதிகளை வெளியிடவில்லை என்றும், இது தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு துறை மூலமாக மாநில மற்றும் மாவட்ட அளவில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் கூறியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!